அமெரிக்க அதிபர் தேர்தல்... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டலுக்கு பேஸ்புக்கில் பெருகும் ஆதரவு
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜிண்டலுக்கு பேஸ்புக்கில் ஆதரவு பெருகிவருகிறது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பரில் நடக்கிறது. ஒபாமா 2 முறை அதிபராக பதவி வகித்துவிட்டதால் அவரால் மீண்டும் போட்டியிட முடியாது. இதனால், ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி வேட்பாளராக முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலரி கிளிண்டன் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெஃப் புஷ் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜிண்டல் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து களத்தில் குதித்தார். தற்போது லூசியானா மாகாண கவர்னராக இருக்கிறார். இவரது பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள்.
அதிபர் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பல கட்ட பிரசாரங்கள், விவாதங்கள், வாக்கெடுப்புக்கு பிறகுதான் கட்சி நிர்வாகிகளால் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தொலைக்காட்சி விவாதங்கள் நடந்து வருகிறது.
குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகும் ஆசையில் 17 பேர் உள்ளனர். இவர்களில் 44 வயதான பாபி ஜிண்டல் 13 வது இடத்தில் உள்ளார். இதனால், முதல் கட்ட தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க ஜிண்டலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதைதொடர்ந்து நேற்றுமுன்தினம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் பேச அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களில் பேஸ்புக்கில் அதிகம் பேசப்படுபவர்கள் பட்டியலில் பாபி ஜிண்டல் பெயரும் இடம்பெற்றுள்ளது.
21 லட்சம் பேர் பாபி ஜிண்டல் பெயரை 49 லட்சம் முறை குறிப்பிட்டுள்ளதாக பேஸ்புக் இணையதளம் தெரிவித்துள்ளது. ஜிண்டலுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications