2 காரணங்கள்.. சீனாவை மட்டும் குறிவைத்து தாக்கும் வைரஸ்கள்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை!
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கோரோனா வைரசுக்கு பின் இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என்று அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் கோரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 26 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
850 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கோரோனா வைரசுக்கு முன், சீனாவை சார்ஸ் வைரஸ் தாக்கியது. 2003ல் இந்த சார்ஸ் வைரஸால் தாக்கப்பட்டது. அப்போது 850 பேர் பலியானார்கள். 2000க்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டனர்.
மொத்தமாக மூடப்பட்ட வுஹன் நகரம்.. உயரும் பலி எண்ணிக்கை.. சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்!
சீனா
சீனாவிலும் ஜப்பானிலும் எளிதாக வைரஸ்கள் தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. அங்கு மக்கள் மிக எளிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. சார்ஸ் வைரஸும் கோரோனா வைரஸ் குடும்பம்தான். இந்த குடும்பத்தில் மொத்தம் 6 வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கோரோனோ வைரஸ் குடும்பத்தின் 7 வது வைரஸ் ஆகும்.
சீனா
இந்த நிலையில் சீனாவை இப்படி வைரஸ்கள் அடிக்கடி தாக்குவதற்கு பின் இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல் காரணமாக அந்நாட்டு மக்களின் உணவு முறை கூறப்படுகிறது. சீன மக்கள் அதிகமாக கடல் உணவுகளை உண்கிறார்கள். இதில் சில மற்ற நாட்டில் உண்ணப்படுவது கிடையாது. சீனர்கள் இயல்பாக பாம்புகளை கூட உண்கிறார்கள். இதில் பல உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகும்.
காரணம்
இந்த நிலையில் சீனாவை இப்படி வைரஸ்கள் அடிக்கடி தாக்குவதற்கு பின் இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல் காரணமாக அந்நாட்டு மக்களின் உணவு முறை கூறப்படுகிறது. சீன மக்கள் அதிகமாக கடல் உணவுகளை உண்கிறார்கள். இதில் சில மாற்ற நாட்டில் உண்ணப்படுவது கிடையாது. சீனர்கள் இயல்பாக பாம்புகளை கூட உண்கிறார்கள். இதில் பல உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகும்.
உணவு
ஆம் இப்படி பாம்புகளை கூட அவர்கள் பல நாள் பதப்படுத்தி உண்பது வழக்கமாக உள்ளது. இதுதான் அவர்களுக்கு எளிதாக வைரஸ் தாக்குதல் ஏற்பட காரணம் ஆகும். இந்த கோரோனோ வைரஸும், இதேபோல், ஒரு வைரஸ்தான் . இதுவும் விலங்குகள் மூலமும் பரவும் வைரஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக அந்நாட்டு மக்கள் தொகையும் இதற்கு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
மக்கள் தொகை
அதிகமான மக்கள் தொகை காரணமாக எளிதாக கிருமிகள் உருவாகும். இந்த கிருமிகள் மிக எளிதாக பரவும். இதனால் நோய் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதனால் சீனாவில் இப்போது மட்டுமின்றி இனி வரும் காலங்களிலும் சீனா அதிகமாக இதுபோன்ற வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் கூறுகிறார்கள். ஆம் இந்த வைரஸ் தாக்குதல் முடிவு அல்ல. இது மிகப்பெரிய நோய் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.