இந்தியாவை பற்றி எந்த கவலையும் இல்லை.. மனசாட்சியே இல்லாமல் பேசும் மல்லையா
லண்டன்: இந்தியாவை பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பியோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
இந்தியாவே, "கடன்காரா" என கரித்துக் கொட்டினாலும்கூட, கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பது விம்பிள்டன் டென்னிஸை நேரில் பார்ப்பது, குதிரை ரேஸ், கார் ரேஸ் என முழுக்க உல்லாசமாக பொழுதை கழித்து வருகிறார் மல்லையா.

மிதப்புதான்
இந்தியாவில், சிறையிலே அடைத்தால் கூட, ஜெயிலுக்கு பணம் கொடுத்து கிச்சன் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற மிதப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உணர்வே இல்லை
அதை உறுதி செய்வதை போலத்தான் பேட்டியளித்துள்ளார் மல்லையா. இந்தியாவை விட்டு பிரிந்திருப்பதை போன்ற ஃபீலிங்க் ஏற்படவே இல்லை என விஜய் மல்லையா கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

சொந்தக்காரர்களோடு செட்டில்
லண்டனில் நடைபெற்ற பார்முலா- 1 கார் பந்தயத்துக்கு சென்ற விஜய் மல்லையா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
எனது கஸின் சகோதர, சகோதரிகள் கூட பிரிட்டனில்தான் வசிக்கின்றனர் என்பதால், நான் இந்தியா பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார் மல்லையா.

மோடிக்கு பதிலடி
எனது உறவுகளை நான் மிஸ் செய்யவில்லை. பிரிட்டன் சூழல் மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். மல்லையாவை ஒப்படைக்கும்படி இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம், பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும் மல்லையா இவ்வாறு கூறியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications