இந்தியாவுக்கு குறைந்த விலையில் அதிக கச்சா எண்ணெய் கொடுக்கும் ரஷ்யா .. காரணம் இதுதானா?
மாஸ்கோ: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிக்கும் சில நாடுகள் தடைவித்துத்துள்ளதால், இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இரு நாடுகளையும் போரை கைவிடும் படி உலக நாடுகள் கேட்டுக்கொண்டன. அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தும், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாமல், தொடர்ந்து போர் நடந்து வருகிறது..
இதனால் ரஷ்யா மீது பொருளாதார தடைவிதித்துள்ளன அமெரிக்கா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள். இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ரஷ்யா
ரஷ்யா எண்ணெய் வளம் மிக்க நாடு. 2020ம் ஆண்டில் உலகின் மொத்த எண்ணெய் தேவையில் ரஷ்யா 12% உற்பத்தி செய்து கொடுத்தது. அதுபோல் 16% இயற்கை எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்தது. ரஷ்யா தினமும் அமெரிக்காவுக்கு 700000 பேரல் எண்ணெய்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வந்தது ரஷ்யா. அதேபோல் ஐரோப்பிய நாடுகளுக்கு தினமும் 4.5 மில்லியன் எண்ணெய் பேரல்களை ரஷ்யா அனுப்பி வருகிறது.

பொருளாதார தடை
உக்ரைன் மீது போர் நடந்து வருவதால், ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் இந்த நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யமுடியாத நிலையில், புது ஏற்றுமதியாளர்களை ரஷ்யா இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இன்னும் அதிகமாக கொடுக்க முன்வந்துள்ளது.

கச்சா எண்ணெய்
ரஷ்யாவில் உள்ள எரிசக்தி துறையில் இந்தியா சார்பில் 1600 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா அனுமதி கொடுத்திருக்கிறது. இதை ரஷ்ய துணை பிரதமர், இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரியிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், எண்ணெய், எரிவாயு துறைகளில் இந்தியா ரஷ்யா உறவை வலுப்படுத்தும் விதமாக தொடர்ந்து ரஷ்யாவிடம் பேசி வருகிறார் மத்திய அமைச்சர்.

குறைந்த விலையில்
இதையடுத்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு கொடுக்க ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொடுக்க முன்வந்துள்ளது. எப்படி கொண்டுவருவது, ரஷ்யாவுக்கு கொடுக்க வேண்டிய பணம் இதெல்லாம் குறித்தும் அரசுடன் ஆலோசிக்கவுள்ளோம். அதன்பிறகே முடிவு எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

அதிருப்தி
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்தகத்தில் ஈடுபட்டுவருகிறது. இதனால் இந்தியா மீது இந்த நாடுகள் அதிருப்தியில் இருக்கின்றன. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மாதம் 'ஒருதலைபட்சமாக போடப்படும் பொருளாதாரத் தடைகளை ஏற்கமுடியாது' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications