Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியர்களை மீட்க.. காபூல் விமான நிலையத்தில் உதவி புரிந்து வரும் அமெரிக்க படைகள்!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள்., பிற நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இவர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

Recommended Video

    Afghan-ல் சிக்கி தவிக்கும் Indians.. தற்போதைய நிலை என்ன ?

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    காபூல் விமான நிலையம்

    காபூல் விமான நிலையம்

    காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ கூட்டாளிகள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அமெரிக்க படைகள், நோட்டோ படைகள் மக்களை அங்கு இருந்து வெளியேற்றி வருகின்றன. பலர் திரண்டு விடுவதால் காபூல் விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. அமெரிக்கா எதிர்கொண்ட மிக சவாலான பணி இப்போது ஆப்கானில் இருந்து மக்களை வெளியீட்டுவதுதான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனே கூறினார்.

    இந்தியர்கள் மீட்பு

    இந்தியர்கள் மீட்பு

    இதுவரை சுமார் 13,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்தியாவும் ஆப்கானில் உள்ள இந்திய மக்களை மீட்டு வருகிறது. இந்த வார தொடக்கத்தில் இந்திய விமானப்படை (IAF) ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக ஊழியர்கள் உட்பட 120 இந்திய குடிமக்களை வெளியேற்ற ஒரு சிறப்பு விமானத்தை இயக்கியது. துஷன்பே, தஜிகிஸ்தான் மற்றும் கத்தார் வழித்தடங்கள் வழியாக இந்திய மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

    அமெரிக்கா அனுமதி

    அமெரிக்கா அனுமதி

    தற்போது காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய மக்களை அழைத்து வர இந்தியாவிற்கு தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்திய விமானப்படை விமானம் ஒன்று 90 பயணிகளுடன் காபூலில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது.

    ஜோ பைடன் எச்சரிக்கை

    ஜோ பைடன் எச்சரிக்கை

    ஆப்கானிஸ்தானில் இன்னும் 300-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் பத்திரமாக இந்திய விமானப் படை விமானம் மீட்டு வரும் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆப்கானில் இருந்து வெளியேறுபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தாலிபான்களை எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதியில் காபூலில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் என்று கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+