எல்லை பிரச்சனை தீர இந்தியாவும் சீனாவும் பேச்சு நடத்த வேண்டும்: அமெரிக்கா அட்வைஸ்
இந்தியாவும் சீனாவும் எல்லை பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹேதர் நயூர்ட் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டன்: இந்தியாவும் சீனாவும் தங்களுக்கிடையிலான எல்லை பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹேதர் நயூர்ட் வலியுறுத்தியுள்ளார்.
சிக்கிம் மாநில எல்லையில், பூடானின் டோக்லாம் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சாலைகள் அமைக்க முயன்றது. அதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் சீனா ராணுவ வீரர்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து டோக்லாம் எல்லை பகுதியில் போர்ப் பதற்றம் சூழ்ந்தது.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு காண இந்தியா விரும்புகிறது. ஆனால் இந்திய படைகளை வாபஸ் பெற்றால் தான் பேச்சுவார்த்தையே நடைபெறும் என சீனா உறுதியாக இருக்கிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹேதர் நயூர்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கூறும் போது, ' தற்போது நிலவும் இந்த சூழலை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இருநாடுகளும் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்' என்று தெரிவித்தார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications