வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்.. ஐ.நா. விசாரணைக்கு உலகத் தலைவர்கள் கோரிக்கை
லண்டன்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், உக்ரைன்- ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் பிலிப் ஹேமன்ட் இதுகுறித்துக் கூறுகையில், ஐ.நா. தலைமையிலான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இதுகுறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையை உடனடியாக கூட்ட வேண்டும்.
உக்ரைனின் போர்ப் பகுதியில் நிலைமை மோசமடைந்துள்ளதையே இது காட்டுகிறது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் முக்கியமானது. நடந்த சம்பவத்தின் உண்மைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

துரித விசாரணை தேவை- ஐரோப்பிய கவுன்சில் வலியுறுத்தல்
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மனுவல் பரோசா மற்றும் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஹெர்மன் வான் ரூம்பி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் இதில் விரைவான, துரிதமான விசாரணை அவசியம். உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வெளிப்படையான விசாரணைக்கு பான் கி மூன் விருப்பம்
ஐ.நா. பொதுச் செயாளர் பான் கி மூனும் கூட சர்வதேச அளவிலான, முழுமையான, வெளிப்படையான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - புடின்
ரஷ்ய அதிபர் புடினும் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விபத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு ரஷ்ய ராணுவத்தைக் கேட்டுள்ளேன். இந்த குற்றச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் உக்ரைன் மீதுதான் இந்த விவகாரத்தில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட வேண்டும். அந்த நாட்டிற்குள்தான் சம்பவம் நடந்துள்ளது. அந்த நாடுதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று புடின் கூறியுள்ளார்.
ஆனால் ரஷ்ய ராணுவம் அல்லது ரஷ்ய ஆதரவாளர்கள்தான் விமானத்தை தாக்கியுள்ளதாக உக்ரைன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிரதமர் அதிர்ச்சி
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், இது எனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன என்பதை அறியுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications