பதவிக்கு 'உலை'.. பதற்றமே இல்லாமல் யு.எஸ். யோகா தினவிழாக்களில் சுஷ்மா!
நியூயார்க்: சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் யோகா ஒரு மதத்துக்கானது அல்ல.. ஆன்மா, உடலை ஒருங்கிணைக்கும் அறிவியல் என்று நியூயார்க்கில் ஐ.நா. சபையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
'தேடப்படும் குற்றவாளி' லலித் மோடிக்கு உதவியதால் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவரது அமைச்சர் பதவி எந்த நேரத்திலும் பறிபோகலாம் என்ற நிலையில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய சர்வதேச யோகா தின விழாவில் நேற்று அவர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம்தான். அதை யோகாவால் நாம் இணைக்க முடியும். இன மோதல்கள், வன்முறை ஆகியவை மனித சமூகத்துக்கான அச்சுறுத்தலாகத் திகழுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழியாக யோகா விளங்க முடியும். யோகா என்பது மதம் சார்ந்தது அல்ல. அது ஆன்மாவையும், உடலையும் ஒருங்கிணைக்கும் அறிவியல்.
இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே யோகா தோன்றிவிட்டது. யோகா என்பது இந்தியாவின் ஆன்ம பலத்தை வெளிப்படுத்துகிறது.
இதே ஐ.நா. சபையில் யோகாவை அங்கீகரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி முயற்சி மேற்கொண்டார். அடுத்த 75 நாள்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ந் தேதியை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ததற்காக 177 நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. சபை பொது அவையின் தலைவர் சாம் குடேசா, வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
டைம்ஸ் சதுக்கத்தில்..
இதேபோல் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரம் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீங்கள் அனைவருமே யோகா தூதர்களே என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications