கடவுளே எனக்கு கொரோனா வரனும்! ’சைனா மேக்’ மேல நம்பிக்கை இல்லை! வாண்டடாக வண்டியில் ஏறும் சீனர்கள்!

Subscribe to Oneindia Tamil

பீஜிங் : உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோன வைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவில் கோரதாண்டவமாடி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்திக்காக அந்நாட்டு இளைஞர்கள் விபரீத முடிவினை எடுத்து வருவதாகவும், இதனால் அங்கி நிலைமை படுமோசமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.

லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிர படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

மீண்டும் கொரோனா

மீண்டும் கொரோனா

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

படுமோசம்

படுமோசம்

இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் 20 நாட்களில் மட்டும் சுமார் 25 கோடி பேருக்கு சீனாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதே நேரத்தில் அந்நாட்டு அரசு கொரோனா குறித்த விவரங்களை வெளியிடாததால் சீனாவில் தற்போது என்ன நிலைமை நிலவுகிறது என்பது குறித்தும் மற்ற உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் கோரதாண்டவமாடி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்திக்காக அந்நாட்டு இளைஞர்கள் விபரீத முடிவினை எடுத்து வருவதாகவும், இதனால் அங்கி நிலைமை படுமோசமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

அதாவது தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் தரமானவை அல்ல என்ற அவநம்பிக்கையின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக அவர்களே கொரோனாவை ஏற்றுக் கொண்டு வருவதாக பதைபதைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது கொரோனா மற்றும் பிற காரணங்களால் சீனா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ சேவைகள் தரமற்றதாக உள்ளது. மேலும் அரசு சார்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இளைஞர்கள் தாங்களாகவே நோய் தொற்றை வரவழைத்துக் கொள்வதாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா பாதிப்பால் 14 நாட்கள் வீட்டில் தனிமை படுத்தப்படும் போது தங்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பரவும் என நம்புகிறார்கள். இந்த தகவல் தீயாய் பரவிய நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தாங்களாகவே கொரோனா தொற்றை வரவழைத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நபர்களிடம் நெருங்கி பழகி கொரோனா தொற்றுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

மேலும் சிக்கல்

மேலும் சிக்கல்

தங்கள் நாட்டின் தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வதில்லை என்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள் சீனர்கள். தற்போதைய சூழ்நிலையில் பிற நாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் அங்கு முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது நோய் எதிர்ப்பு சக்திக்காக இப்படி விபரீத முயற்சியில் ஈடுபட்டு வருவது சீனாவில் நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+