100, 500க்கே அல்லாடும் போது.. 500 கோடிக்கு எம்எல்ஏவை வாங்குறாங்க! இலங்கை நிலைமைதான்! சுளீர் ஜோதிமணி
கரூர் : மத அரசியல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி நிலையைப் போல இந்தியாவிலும் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும், இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருகிறது என பாஜக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில் தனியார் அரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, மூன்று சக்கர ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், பிரெய்லி கருவிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினார்.

எம்.பி ஜோதிமணி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி,"மத அரசியல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி நிலையைப் போல இந்தியாவிலும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருகிறது.

பிரதமர் மோடி
தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் மோடி அவர்களின் வயதை விட ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதாரம், மக்களின் பிரச்சினை உள்ளிட்டவற்றை பேசுவதை விட மதம் மற்றும் அது சார்ந்த வெறுப்பு அரசியலையே பேசும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

வேலையின்மை
இந்தியா அதிவேகமான வளர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கும் சர்வே அனைத்தும் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. எக்கனாமிக் டைம்ஸ், எகனாமிக்ஸ் ஃபோரம் உட்பட மத்திய அரசு சர்வே கூட இந்தியா வளர்ச்சி பாதையில் செல்வதாக இதுவரை குறிப்பிடவில்லை. மத்திய அரசின் சர்வே கூட இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை இருப்பதாக தெரிவிக்கிறது.

விலை பேசி வாங்குகின்றனர்
சாதாரண இந்திய குடிமகன் 100, 500 ரூபாயை பார்ப்பதற்கு அதிகம் போராடும் சூழ்நிலையில் பாஜக மட்டும் சட்டமன்ற உறுப்பினர்களை 100 கோடி 500 கோடி ரூபாய்க்கு விலை பேசி வாங்குகின்றனர். பாஜகவின் மோடி அரசும், ஆர் எஸ் எஸ்-ம் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்கின்றனர்" என்று பேசினார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications