''நீட் தேர்வு என்னும் அநீதியை எதிர்க்க இதுதான் சரியான வழி''.. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி யோசனை!
கரூர்: நீட் தேர்வுக்கு எதிரான அநீதிதியை போர் குணத்துடன் எதிர்கொள்வோம். இதற்கு தற்கொலை தீர்வாகாது என்று கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு 3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கினார்.

தீர்மானம்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய ஜோதிமணி எம்.பி கூறியதாவது:- ஒரு தேர்வு மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்காது. மாணவர்களுக்கு தகுதி இருக்கும்போது அதை நிறைவேற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு. நீட் தேர்வு தொடர்பாக ஒரு குழு அமைத்து, அந்த குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் அதிகம்
இந்த தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கட்டத்தில் கூட தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு ஒன்றிய அரசு அறிவிக்க முடியும். ஒன்றிய அரசு தவறை திருத்திக் கொண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்வு எழுதி இருக்கும் பட்சத்தில் மீண்டும் நீட் தேர்வு போன்ற தேர்வு தேவையில்லை. மருத்துவர் என்பது ஏழை மாணவர்களின் கனவு. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம்.

படிக்க வையுங்கள்
தமிழகத்தில் உள்ள நிலங்களில், வரிகளில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும். அதற்காக மற்ற மாநில மாணவர்கள் படிக்க வேண்டாம் என சொல்லவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க தான் ஆளுகிறது. அங்கு மருத்துவக் கல்லூரிகள் அதிகளவில் கட்டி படிக்க வையுங்கள்.

போர்க்குணம்
மரண ஓலத்தால் நீட் தேர்வை எதிர்க்க முடியாது, போர் குணத்தால் மட்டுமே எதிர்க்க முடியும். அதற்கு நாங்கள் துணை நிற்போம். நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதி, அநீதிக்கு எதிராக போர் குணத்துடன் எதிர் கொள்வோம், தற்கொலை தீர்வாகாது, இவ்வாறு ஜோதிமணி எம்.பி தெரிவித்தார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications