தேசியக் கொடி இயக்கம் என்பது ஏமாற்று வேலை.. மக்களை திசைதிருப்பும் அரசியல்.. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி!
கரூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி இயக்கம் என்பது பாஜகவின் ஏமாற்று வேலை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்து அண்மையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, விலைவாசி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டார்.

நடைபயணம் எதற்கு?
அப்போது கரூர் மாவட்ட மார்க்கெட் பகுதியில் உள்ள மக்களவை சந்தித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறுகையில், பாஜகவின் கொடுங்கோன்மை ஆட்சியை பற்றி மக்கள் மத்தியில் எடுத்துரைக்க நடைபயணம் தொடங்கியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி செப்.7ம் தேதி பாத யாத்திரை மேற்கொள்ளவுள்ளார்.

விலைவாசி உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் வரை அனைத்து பொருட்களின் விலையும் பாஜக அரசு உயர்த்தியுள்ளது. ஏழை எளிய மக்கள் சாதாரண பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனால் மக்களின் வருமானம் தொடர்ந்து குறைந்துகொண்டே போகிறது.

பிடிஆர் விவகாரம்
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீதான பாஜக தாக்குதல் அருவருக்கத்தக்கது. களத்திலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி பாஜக இதுவரை இந்தியாவில் நாகரீக அரசியலை செய்ததில்லை. பாஜகவின் ஆபாசமான அரசியலை தமிழக அரசு நிச்சயம் ஒடுக்கும். பாஜகவின் அரசியலுக்கு தமிழக மண்ணில் இடமில்லை என்று தெரிவித்தார்.
Recommended Video

தேசியக் கொடி இயக்கம்
தொடர்ந்து வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி குறித்து பேசிய ஜோதிமணி, ரூ.20 கொடுத்து தேசியக் கொடி வாங்க வேண்டும் என்று மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வெறும் ரூ.8க்கு தயாரிக்கும் தேசியக் கொடியை, எதற்காக ரூ.20க்கு விற்பனை செய்ய வேண்டும். தேசிய பக்தி என்பது விற்பனைக்கானது அல்ல. தேசியக் கொடிக்கு என்று மக்கள் மத்தியில் ஒரு உணர்வு எப்போதும் இருக்கும். அது பிரதமர் நரேந்திர மோடியால் வருவது அல்ல.
2002 வரை ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. தேசியக் கொடி இயக்கம் என்பது ஒரு ஏமாற்று வேலை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை பற்றி மக்களின் கவனத்தை திசைதிருப்பவே வேலை தான் தேசியக் கொடி இயக்கம். இது ஒரு போலி அரசியல், போலி தேசியவாதம் என்று குற்றம்சாட்டினார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications