புத்தகங்களில் பாடமெடுத்த தலைமையாசிரியை! இறப்புக்குப் பின் புத்தகமாகவே ஆனார்! கிருஷ்ணகிரி நெகிழ்ச்சி!
கிருஷ்ணகிரி : தனது உயிர் பிரிந்தாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் உடலை தானம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையின் உடல் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தலைமை ஆசிரியை செண்பகவல்லி சமூக அறிவியல் பாடப்பிரிவு நடத்தி வந்தார்.
மேலும் தலைமை ஆசிரியை ஆக பணிபுரிந்த இவர் கடந்த 2005ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆசிரியை செண்பகவல்லி
ஆசிரியை செண்பகவல்லி கடந்த 2010ஆம் ஆண்டு தன் உடலை அடக்கம் செய்வோ அல்லது எனது மகன் மற்றும் பேரன்களிடம் ஒப்படைக்காமல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வழங்கவேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார். அதன்படி இன்று உடல்நலகுறைவால் உயிரிழந்த ஆசிரியை செண்பகவல்லி உடல் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடல் தானம்
மேலும் இதே போல் ஆசிரியை செண்பகவல்லியின் கணவர் கணேசன் என்பவரும் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார்.இவர் கடந்த 2017ஆம் ஆண்டு உயிரிழந்தார் . அவரது உடலும் தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெகிழ்ச்சி
ஊத்தங்கரை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற இருவரும் உடல்தானம் செய்துள்ளது ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் பொதுமக்களுக்கு உடல் தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது .

பாராட்டு
மேலும் மனிதன் இறந்தால் சுடுகாட்டுக்கும் இடுகாட்டுக்கும் சமாதிக்கும் ஆசைப்படும் இவ்வுலகில் இவர்களின் உடல் மருத்துவ மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணவன் மனைவி இவர்களாகவே உயில் எழுதி வைத்து இறந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் புது வித சிந்தனையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications