142 எம்பிக்கள் ஆதரவு.. பிரிட்டனை ஆளப்போகும் இந்திய வம்சாவளி! இன்று பிரதமராக பதவியேற்க “சான்ஸ்”
லண்டன்: போரிஸ் ஜான்சனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் சில நாட்களிலேயே பதவி விலகிய நிலையில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்று பிரிட்டன் பிரதமராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, பிரிட்டன் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட அவர், லிஸ் டிரஸிடம் தோல்வியடைந்தார். அதிக எம்.பிக்கள் ஆதரவு இருந்த காரணத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் லிஸ் டிரஸ்.

ரிஷி சுனக்
இந்த சூழலில் பிரிட்டனின் பொருளாதார நெருக்கடியை தன்னால் கையாள முடியவில்லை என்று கூறி பிரதமர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தன்னை முறைப்படி பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார்.

பொரு“பிரிட்டன் சிறந்த நாடு. நாம் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டனின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியுடைய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிற்கிறேன்.” என்று ரிஷி சுனக் அறிவித்தார். ளாதார நெருக்கடி
"பிரிட்டன் சிறந்த நாடு. நாம் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டனின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியுடைய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிற்கிறேன்." என்று ரிஷி சுனக் அறிவித்தார்.

போரிஸ் ஜான்சன்
இதற்கிடையே பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால், அவருக்கு ரிஷி சுனக்கை விட குறைவாக 59 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. மற்றொரு போட்டியாளரான பென்னி மோர்டாண்டுக்கு 29 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

100 எம்பிக்கள்
இன்று போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டாண்ட் 100 எம்பிக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதை காட்டாவிட்டால் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு விடுவார். கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்பிக்கள் உள்ளனர். இந்த பிரதமர் தேர்தலில் போட்டியிட 100 எம்பிக்கள் ஆதரவு வேண்டும்.

மும்முனை போட்டி
ஒருவேளை போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி ஆகியோருக்கு 100 எம்பிக்களின் ஆதரவு கிடைத்து மும்முனை போட்டி ஏற்படும் சூழல் உருவானால் 1.7 லட்சம் டோரி உறுப்பினர்களிடம் ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 2 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமர் தேர்வு செய்யப்படலாம்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications