142 எம்பிக்கள் ஆதரவு.. பிரிட்டனை ஆளப்போகும் இந்திய வம்சாவளி! இன்று பிரதமராக பதவியேற்க “சான்ஸ்”
லண்டன்: போரிஸ் ஜான்சனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் சில நாட்களிலேயே பதவி விலகிய நிலையில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்று பிரிட்டன் பிரதமராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, பிரிட்டன் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட அவர், லிஸ் டிரஸிடம் தோல்வியடைந்தார். அதிக எம்.பிக்கள் ஆதரவு இருந்த காரணத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் லிஸ் டிரஸ்.

ரிஷி சுனக்
இந்த சூழலில் பிரிட்டனின் பொருளாதார நெருக்கடியை தன்னால் கையாள முடியவில்லை என்று கூறி பிரதமர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தன்னை முறைப்படி பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார்.

பொரு“பிரிட்டன் சிறந்த நாடு. நாம் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டனின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியுடைய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிற்கிறேன்.” என்று ரிஷி சுனக் அறிவித்தார். ளாதார நெருக்கடி
"பிரிட்டன் சிறந்த நாடு. நாம் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டனின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியுடைய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிற்கிறேன்." என்று ரிஷி சுனக் அறிவித்தார்.

போரிஸ் ஜான்சன்
இதற்கிடையே பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால், அவருக்கு ரிஷி சுனக்கை விட குறைவாக 59 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. மற்றொரு போட்டியாளரான பென்னி மோர்டாண்டுக்கு 29 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

100 எம்பிக்கள்
இன்று போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டாண்ட் 100 எம்பிக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதை காட்டாவிட்டால் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு விடுவார். கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்பிக்கள் உள்ளனர். இந்த பிரதமர் தேர்தலில் போட்டியிட 100 எம்பிக்கள் ஆதரவு வேண்டும்.

மும்முனை போட்டி
ஒருவேளை போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி ஆகியோருக்கு 100 எம்பிக்களின் ஆதரவு கிடைத்து மும்முனை போட்டி ஏற்படும் சூழல் உருவானால் 1.7 லட்சம் டோரி உறுப்பினர்களிடம் ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 2 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமர் தேர்வு செய்யப்படலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications