உ.பி. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2022: வதந்தி பரப்பிய அகிலேஷை சிறைக்கு அனுப்புங்கள் - பாஜக எம்.பி
தவறாக வதந்தி பரப்பிய அகிலேஷ் யாதவை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக எம்.பி கூறியுள்ளார்.
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் சட்டவிரோதமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டினார் அகிலேஷ் யாதவ். தவறாக வதந்தி பரப்பிய அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச தேர்தல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாரணாசியில் முறைகேடாக மாற்றப்பட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார்.

சமாஜ்வாதி கட்சி
இதனை ஆதரித்து சமாஜ்வாதிக் கட்சி புதன்கிழமை காலை ஒரு வீடியோவை ட்வீட் செய்தது, அதில் வாரணாசியின் ஆணையர் தீபக் அகர்வால் செய்தியாளர்களிடம், மின்னணு இயந்திரங்களின் இயக்கத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறுவது போல் தெரிகிறது. எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் பயிற்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டவை என்று தீபக் அகர்வால் அதில் கூறுவதும் பதிவாகியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தீபக் அகர்வால் கூறும்போது, வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல முடியாது என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். மூன்று அடுக்குப் பாதுகாப்பு உள்ளது. அரசியல் கட்சித் தொண்டர்கள் கூட மையங்களுக்கு வெளியே அமர்ந்து கண்காணித்து கொண்டுள்ளனர் என்றார். சமாஜ்வாதி கட்சி தனது ட்வீட்டில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. "இது யாருடைய விருப்பத்தின் பேரில் நடக்கிறது? முதல்வர் அலுவலகம் மூலம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? தேர்தல் கமிஷன், தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்" என்று சமாஜ்வாதிக் கட்சி சாடியுள்ளது.

அகிலேஷ் யாதவ்
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்தை உருவாக்க விரும்புகின்றன. இது ஜனநாயகத்திற்கான கடைசி போராட்டம். வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் இ.வி.எம். (மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்) கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்ட செல்லப்பட்டால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

திருட்டு
இது திருட்டு. நாங்கள் எங்கள் வாக்குகளை காப்பாற்ற வேண்டும், அதற்கு எதிராக நாம் நீதிமன்றத்துக்கு செல்லலாம், ஆனால் அதற்கு முன், ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். பாஜகவுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ள இடங்களில் வாக்கு எண்ணிக்கையை மெதுவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக மறுப்பு
சமாஜ்வாதி கட்சியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பாஜக மறுத்துள்ளது. அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ், இந்திய தண்டனை சட்டத்தின்படி , வதந்திகளை பரப்புதல், பொதுமக்களை தவறாக வழிநடத்துதல், தவறான தகவல்களை வழங்குதல், கடுமையான குற்றங்களின் பிரிவின் கீழ் வரும். அகிலேஷ் யாதவ் கண்மூடித்தனமாக இதுபோன்ற குற்றங்களை செய்கிறார். வதந்திகளை பரப்பியதற்காக அகிலேஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார். அகிலேஷ் யாதவை கம்பிக்கு பின்னால் நிறுத்த வேண்டும்.

மாநிலம் நரகமாக்கப்பட்டது
உத்தர பிரதேசத்தில் தனது 5 ஆண்டு கால ஆட்சியின் போது அவர் ஜனநாயக மதிப்புகள், லட்சியங்கள், ஜனநாயக கொள்கைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்ததால், அவரது வாயிலிருந்து ஜனநாயகத்தை பற்றி கேட்பது விசித்திரமாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் நரகமாக்கப்பட்டது. மாபியா மற்றும் குண்டர்களின் பிடியில் மாநிலம் சிக்கியது. சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் மாநில அரசின் நிதி கொள்ளையடிக்கப்பட்டது, விதிமுறைகள் மீறப்பட்டன என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications