மதிக்க மாட்றாங்க! "சனாதன தர்மத்தை மீட்டெடுக்கனும்” .. சொல்கிறார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்..!
லக்னோ : இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் வேண்டியது அவசியம் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உபி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர்.
கர்நாடகாவின் ஹிஜாப் விவகாரம், கடைகளில் ஹலால் இறைச்சி மற்றும் மசூதிகளில் ஒலிப் பெருக்கிக் தடை என வலதுசாரி அமைப்புகள் அடுத்தடுத்து கிளப்பி வரும் நிலையில், இந்தி விவகாரமும் இந்தியா முழுவதும் புயலைக் கிளப்பி வருகிறது.

சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்
குறிப்பாக பாஜக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைத்துள்ள உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும், பல இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுவெளியிலேயே பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு வலதுசாரி அமைப்பினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் பேசிய சாமியார் ஒருவர், இஸ்லாமிய பெண்களுக்கு பொது வெளியில் பாலியல் பாலாத்கார மிரட்டல் விடுத்தார்.

இஸ்லாமியர்களுக்கு மிரட்டல்
சீதாபூர் மாவட்டத்தில் ஜீப்பில் அமர்ந்தபடி ஒலிப்பெருக்கியில் பேசிய முனி தாஸ் என்ற சாமியார் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு வகுப்புவாத மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை பேசினார். சீத்தாபூர் பகுதியில் உள்ள எந்த ஒரு பெண்ணையும் ஒரு இஸ்லாமியர் துன்புறுத்தினால் முஸ்லிம் பெண்களை கடத்தி பகிரங்கமாக பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று கூறினார். அவர் கைது செய்யப்பட்ட போதும் சில நாட்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் சனாதன தர்மம்
இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் வேண்டியது அவசியம் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தில் ஷாஜஹான்பூர் மாவட்டத்தின் கலான் நகரில் ஒரு தனியார் பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் கேரள மாநில ஆளுநரான ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமேஷ் பிரதாப் சிங், காவல் கண்காணிப்பாளர் எஸ் ஆனந்த், எம்எல்ஏ ஹரி பிரகாஷ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ஆரிப் முகமது கான்
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆரிப் முகமது கான், இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்ம கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேசுகையில், நாட்டின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க அனைவரும் பாடுபட வேண்டும். நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் சனாதன கொள்கைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக.

இழிவாக பார்க்க முடியாது
கல்வி இல்லாமல் இது சாத்தியமில்லை. மனித வாழ்வின் நோக்கம் அறிவை அடைவதே, பணிவு என்பது அறிவின் விளைவு என்றார் சுவாமி விவேகானந்தர். பணிவு உள்ள எவரையும் இழிவாகப் பார்க்க முடியாது." என பேசினார். சனாதன தர்மம் என்பது சாதி அடிப்படையில் மக்களை பிரிப்பது என கூறப்படும் நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கேரள மாநில ஆளுநர் சனாதன தர்மத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென பேசியது இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications