லக்கிம்பூர் விவசாயிகள் கொலை...ஒரு வார்த்தை சொல்லாமல் மவுனம் காப்பது ஏன் - மோடியை கேட்ட கபில் சிபல்
லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்னோ: உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஒரு வார்த்தைக்கூட எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் மற்றும் மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விழா ஒன்றிற்கு பங்கேற்க சென்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் பின்னால் வந்த கார் விவசாயிகள் மீது மோதி தூக்கி வீசியது. அப்போது விவசாயிகள் கூக்குரல் எழுப்பிக்கொண்டு சிதறி ஓடினர். பின்னாலேயே இரண்டு கார்களும் வரிசையாக சென்றன. இதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். உயிரிழந்தவர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவாவை உத்தரபிரதேச மாநில அரசு நியமித்துள்ளது. கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பும் மத்திய உள்துறை இணை அமைச்சர் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.
அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் லவ் குஷ், ஆஷிஸ் பாண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரின் மகனும் இதுவரை போலீஸார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.
லக்கிம்பூர் கெரி விவகாரத்தை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. லக்கிம்பூர் கெரி கலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியிருந்தார்.
லக்கிம்பூர் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியதும் அதற்கு கபில் சிபல் நன்றியும் தெரிவித்திருந்தார். இந்தியாவில் நீதியின் கோயில்கள் நீதிமன்றங்கள். அதுதான் குரலற்றவர்களின் நம்பிக்கையான இடம் எனவும் கபில் சிபல் தெரிவித்திருந்தார்.
இதனிடையே கபில் சிபல் ட்விட்டரில் பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், லக்கிம்பூர் கெரி சம்பவம் உண்மையில் கொடூரமானது. ஆனால், ஏன் நீங்கள் அதுகுறித்து அறிந்தும் மவுனமாக இருக்கிறீர்கள் மோடி என்று பதிவிட்டுள்ளார்.
கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காகக் குறைந்தபட்சம் ஒரு இரங்கல் வார்த்தை உங்களிடம் இருந்து வருவது எங்களுக்கு அவசியம். அது ஒன்றும் கடினமானதாக இருக்காதே என்று கூறியுள்ள கபில்சிபல், நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், எவ்வாறு நீங்கள் எதிர்வினையாற்றி இருப்பீர்கள். தயவுசெய்து எங்களிடம் கூறுங்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications