உபியை அலற வைக்கும் லவ் ஜிகாத்.. கடும் நடவடிக்கை எடுக்க.. போலீஸுக்கு யோகி உத்தரவு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாதி அதிகரித்து வருவதால், இதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லவ் ஜிகாதி என்பது ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வது. குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மதம் மாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. லவ் ஜிகாதி மூலம் திருமணம் முடிந்து மதம் மாற்றம் செய்வது என்ற குற்றச்சாட்டும், இதனால் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இந்துப் பெண்களை மதம் மாற்றம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. .

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், மீரட், லக்கிம்பூர் ஆகிய இடங்களில் இதுபோன்று பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மதம் மாற்றம் செய்த பின்னர் திருமணம் செய்யுமாறு வலியுறுத்தப்படுவதாக புகார்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் செய்தி தொடர்பாளர் மிருதயுஞ்ஜெய் குமார் கூறுகையில், ''மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லவ் ஜிகாதி நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு மூத்த உள்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். யுக்திகள் தயாரிக்குமாறும், புதிய சட்டங்கள் இயற்றுமாறும் தெரிவித்துள்ளார்'' என்றார்.
கூடுதல் உள்துறை அமைச்சர் அவனீஷ் குமார் அவஸ்தி அளித்திருக்கும் பேட்டியில், ''இது ஒரு சமூக பிரச்சினை. அதைத் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நாங்களும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். தற்போது சமூக ஊடகங்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதன் மூலமும் செய்தி பரவுகிறது.
பல்வேறு குற்றவாளிகள் மீது இதுதொடர்பாக வழக்குகள் நடந்து வருகிறது. இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. பெண்களின் குடும்பத்திற்கு பண ரீதியில் உதவிகள் வழங்க வேண்டும்'' என்றார்.
அதேசமயம் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படாது என்றும், தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய சட்டங்களே போதும் என்றும் தெரிவித்துள்ளார். பெண்கள் திருமணத்திற்கு முன்பு கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யப்படுகின்றனரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications