முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது பாஜக அரசுதான்: உபி தேர்தல் பிரசாரத்தில் மோடி பேச்சு
லக்னோ: முத்தலாக் தடை சட்டம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் கீழ் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள், அங்கு பள்ளி, கல்லூரி செல்லும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று கான்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிரதமர் மோடி
''2017- ஆம் ஆண்டுக்கு முன்பாக உத்தரபிரதேசத்தில் ரேஷன் கார்டு மோசடி ஒவ்வொரு நாளும் நடைபெற்றது. லட்சக்கணக்கான போலி ரேஷன் கார்டுகளை அவர்கள் உருவாக்கினார்கள். இந்த போலி ரேஷன் கார்டு திட்டத்தை இரட்டை என் ஜின் கொண்ட அரசாங்கம் தடுத்து நிறுத்தியது. முஸ்லிம் பெண்களை முத்தலாக்கிலிருந்து விடுவித்தது பாஜக அரசு. முஸ்லிம் பெண்கள் பாஜக அரசை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியபோது, எதிர் அணியினர் கவலையடைந்தனர். பாஜக ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுடனும் நிற்கிறது'' என்று பிரதமர் மோடி பேசினார்.

முஸ்லிம் பெண்கள்
''உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் கீழ் தான் முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முத்தலாக் தடை சட்டம் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. முஸ்லிம் பெண்கள் தெருக்களில் செல்லும்போது, ஈவ் டீசிங் செய்யப்படுகிறார்கள். அதனால் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எங்கள் அரசாங்கத்தால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு அவர்கள் இப்போது பாதுகாப்போடு இருக்கிறார்கள்'' என்று பேசியுள்ளார் பிரதமர்

ஹிஜாப்
கர்நாடக மாநிலத்தில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், சர்வதேச பிரச்சனையானது ஹிஜாப் விவகாரம். கல்லூரிக்கு சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்தனர். இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் பெரிதான நிலையில், பிரதமர் மோடி பாஜக ஆட்சியில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரசாரம்
முஸ்லிம் பெண்களுக்கு பாஜக பாதுகாப்பாக இருப்பதாக பாஜக தொடர் பிரசாரம் செய்து வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் தேர்தலில் அமித்ஷா முதல் பிரதமர் வரை அனைவரும் முஸ்லிம் பெண்கள் குறித்து பேசி வருகின்றனர். சஹரான்பூரில் பாஜக பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ''முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு அவசியம்'' என்று கடந்த சில தினங்களுக்கு முன் பேசி இருந்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications