உ.பி. 3-ம் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்தது- 135 கிரிமினல் வேட்பாளர்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 3-ம் கட்டமாக நாளை மறுநாள் பிப்ரவரி 20-ந் தேதி 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 3-ம் கட்ட தேர்தல் களத்தில் போட்டியிடும் 623 வேட்பாளர்களில் 135 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி.3-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி 7-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரையான வாக்குப் பதிவுகள் சுமார் 60% என்ற அளவில் பதிவாகி உள்ளன.

59 இடங்களில் தேர்தல்
ஒருசில வன்முறை சம்பவங்கள் தவிர பொதுவாக உ.பி. தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவடைந்துள்ளன. நாளை மறுநாள் பிப்ரவரி 20-ந் தேதி 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது.

களத்தில் 135 கிரிமினல் வேட்பாளர்கள்
இத்தேர்தல் களத்தில் மொத்தம் 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 135 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் 58 வேட்பாளர்களில் 30 பேர்; பாஜகவின் 55 வேட்பாளர்களில் 25 பேர்; பகுஜன் சமாஜ் கட்சியின் 59 வேட்பாளர்களில் 23 பேர்; காங்கிரஸ் கட்சியின் 56 வேட்பாளர்களில் 20 பேர்; ஆம் ஆத்மி கட்சியின் 49 வேட்பாளர்களில் 11 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

சமாஜ்வாதியில் அதிகம்
மேலும் சமாஜ்வாதி கட்சியின் 21, பாஜகவின் 20, பகுஜன் சமாஜ் கட்சியின் 18, ஆம் ஆத்மியின் 11, காங்கிரஸின் 10 வேட்பாளர்கள் தங்கள் மீது சீரியசான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என கூறியுள்ளனர். 3-ம் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் 59 தொகுதிகளில் 26 தொகுதிகள் வன்முறை அபாயம் கொண்டதாக சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

245 கோடீஸ்வர வேட்பாளர்கள்
அத்துடன் 623 வேட்பாளர்களில் 39% பேர் அதாவது 245 பேர் கோடீஸ்வரர்கள். சமாஜ்வாதி கட்சியின் 52, பாஜகவின் 48, பகுஜன் சமாஜ் கட்சியின் 46, காங்கிரஸின் 29, ஆம் ஆத்மியின் 18 வேட்பாளர்கள் ரூ1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் யஷ்பால் சிங் யாதவ்தான் மிகப் பெரிய கோடீஸ்வர வேட்பாளர். அவர் தமக்கு ரூ70 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே












Click it and Unblock the Notifications