இ.வி.எம் மிஷின்களை எடுத்து சென்றதில் விதிமீறல் உள்ளது.. ஆனால் முறைகேடு இல்லை: உ.பி. தேர்தல் அதிகாரி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தலில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய புகார் உண்மைதான் என தேர்தல் அதிகாரி ஒப்புக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களித்ததாக ஒப்புகைச் சீட்டில் காட்டுகிறது என்கிற புகார் எழுந்தது. ஆனால் இதனை அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர். உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் கூறப்பட்டன.

இந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க வேட்பாளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டிருந்தார். இதனால் கண்கொத்தி பாம்பாக சமாஜ்வாதி கட்சியினர் இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். சில இடங்களில் வேட்பாளர்கள் பைனாகுலர் மூலம் 3 ஷிப்ட் போட்டு இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வேட்பாளர்களுக்கு தெரியாமல் வேறு இடங்களுக்கு மாற்றுவதாக அகிலேஷ் யாதவ் நேற்று பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், அயோத்தியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறப் போகிறது. இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கொண்டு பாஜக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்துள்ளனர். உள்ளூர் வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இது சமாஜ்வாதி கட்சியின் வாக்குகளை திருடுவதற்கு சமமானது என கொந்தளித்திருந்தார். இதேபோல் வாரணாசியிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக கூறி சமாஜ்வாதி கட்சியினர் திடீர் போராட்டம் நடத்தினர்.
அகிலேஷ் யாதவின் இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டு உண்மை என தேர்தல் அதிகாரிகள் மழுப்பலான ஒரு விளக்கம் அளித்துள்ளனர். வாரணாசி தேர்தல் ஆணைய அதிகாரி தீபக் அகர்வால் கூறுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விதிமுறைகளை அதாவது புரோட்டகால் மீறி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது உண்மைதான். ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகளை மாற்றுவதற்காக அவை கொண்டு செல்லப்படவில்லை. சில பயிற்சிகளுக்காக கொண்டு செல்லப்பட்டது என்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications