"என்னை தொட்டு பாருங்க".. மாலையுடன் மதுரைக்கு வந்த முருகன்.. "அம்பேத்கர் எல்லோருக்கும் பொதுவானவர்"
அம்பேத்கர் சிலைக்கு எல்.முருகன் மாலை அணிவித்தார்
மதுரை: "பாஜகவினர் ரொம்பவும் அமைதியானவர்கள்... அதனால்தான் அன்னைக்கு அடிக்கும்போதுகூட அமைதியாக இருந்தார்கள்... திருமாவளவன் தன் கட்சியினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்... அம்பேத்கரின் புகழை எடுத்து செல்வதில் பாஜகவினருக்கு நிகர் யாருமில்லை" என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று மதுரை அவுட் போஸ்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலையிட்டு மரியாதை செய்தார்...
இதையடுத்து, மதுரை மாவட்ட பாஜகவினர் சிலர் மாலை போட வந்தனர்.. அவர்கள் அங்கிருந்த விசிகவினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்..

வாக்குவாதம்
இதனால், 2 தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டன்ர.. பிறகு 2 தரப்பும் மோதிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. அப்போது, சிலர் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.. இறுதியில், இந்த சம்பவம் தொடர்பாக விசிகவினர் 50 பேர் மீதும், பாஜகவினர் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அறிவிப்பு
நடந்த சம்பவத்தை அறிந்த பாஜக மாநில தலைவர், "அம்பேத்கர் எல்லாருக்குமே பொதுவானவர்... அவர் சிலைக்கு மாலையிட நானே வருவேன்... யார் என்னை தடுக்கறாங்கன்னு பார்க்கிறேன்" என்று அறிவித்தார்.. இதற்காகவே இன்று மாலையுடன் மதுரைக்கு வந்தார்.. ஆனால், முருகன் வந்தால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மதுரை விசிகவினர் ஏற்கனவே சொல்லி இருந்தனர்..

பேட்டி
இதனால், மறுபடியும் பதட்டம் வந்துவிடுமோ என்று நினைத்த போலீசார், அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலை பகுதியில் பலமான போலீஸ் பாதுகாப்பை போட்டனர். மாலையுடன் வந்த முருகன், அம்பேத்கர் பிறந்த நாள் அன்று சிலைக்கு மாலையிட்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொன்னதாவது:

பாஜக
"பாஜகவினர் ரொம்பவும் அமைதியானவர்கள்... அதனால்தான் அன்னைக்கு அடிக்கும்போதுகூட அமைதியாக இருந்தார்கள். .,.. திருமாவளவன் தன் கட்சியினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்... அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது பாஜக ஆட்சியில்தான்... அவரது பிறந்தநாளை எங்களது ஆட்சியில்தான் பொது விடுமுறை என்று அறிவித்துள்ளோம்.. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பீம் மொபைல் ஆப் ஒன்றினை அறிமுகம் செய்தோம்... அதனால், அம்பேத்கரின் புகழை எடுத்து செல்வதில் பாஜகவினருக்கு நிகர் யாருமில்லை...

விசிக
2 நாட்களுக்கு முன்பு மதுரையில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவின் போது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற எங்களது கட்சியினர் மீது விடுதலை சிறுத்தைகளின் குண்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

செல்வாக்கு
விசிக வடமாவட்டங்களில் செல்வாக்கை இழந்ததால்தான் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.. இதை பொறுக்க முடியாத அந்த கட்சியினர் வேண்டுமென்றே எங்களது கட்சி தொண்டர்களை- நிர்வாகிகளை தாக்குகின்றனர். அரக்கோணம் சம்பவத்தை திமுகவும், விசிகவும் சாதி பிரச்சினையாக்க முயல்கிறார்கள்.. அதனால் விசிக மீதான கண்காணிப்பை காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.
-
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications