"என்னை தொட்டு பாருங்க".. மாலையுடன் மதுரைக்கு வந்த முருகன்.. "அம்பேத்கர் எல்லோருக்கும் பொதுவானவர்"
அம்பேத்கர் சிலைக்கு எல்.முருகன் மாலை அணிவித்தார்
மதுரை: "பாஜகவினர் ரொம்பவும் அமைதியானவர்கள்... அதனால்தான் அன்னைக்கு அடிக்கும்போதுகூட அமைதியாக இருந்தார்கள்... திருமாவளவன் தன் கட்சியினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்... அம்பேத்கரின் புகழை எடுத்து செல்வதில் பாஜகவினருக்கு நிகர் யாருமில்லை" என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று மதுரை அவுட் போஸ்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலையிட்டு மரியாதை செய்தார்...
இதையடுத்து, மதுரை மாவட்ட பாஜகவினர் சிலர் மாலை போட வந்தனர்.. அவர்கள் அங்கிருந்த விசிகவினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்..

வாக்குவாதம்
இதனால், 2 தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டன்ர.. பிறகு 2 தரப்பும் மோதிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. அப்போது, சிலர் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.. இறுதியில், இந்த சம்பவம் தொடர்பாக விசிகவினர் 50 பேர் மீதும், பாஜகவினர் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அறிவிப்பு
நடந்த சம்பவத்தை அறிந்த பாஜக மாநில தலைவர், "அம்பேத்கர் எல்லாருக்குமே பொதுவானவர்... அவர் சிலைக்கு மாலையிட நானே வருவேன்... யார் என்னை தடுக்கறாங்கன்னு பார்க்கிறேன்" என்று அறிவித்தார்.. இதற்காகவே இன்று மாலையுடன் மதுரைக்கு வந்தார்.. ஆனால், முருகன் வந்தால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மதுரை விசிகவினர் ஏற்கனவே சொல்லி இருந்தனர்..

பேட்டி
இதனால், மறுபடியும் பதட்டம் வந்துவிடுமோ என்று நினைத்த போலீசார், அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலை பகுதியில் பலமான போலீஸ் பாதுகாப்பை போட்டனர். மாலையுடன் வந்த முருகன், அம்பேத்கர் பிறந்த நாள் அன்று சிலைக்கு மாலையிட்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொன்னதாவது:

பாஜக
"பாஜகவினர் ரொம்பவும் அமைதியானவர்கள்... அதனால்தான் அன்னைக்கு அடிக்கும்போதுகூட அமைதியாக இருந்தார்கள். .,.. திருமாவளவன் தன் கட்சியினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்... அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது பாஜக ஆட்சியில்தான்... அவரது பிறந்தநாளை எங்களது ஆட்சியில்தான் பொது விடுமுறை என்று அறிவித்துள்ளோம்.. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பீம் மொபைல் ஆப் ஒன்றினை அறிமுகம் செய்தோம்... அதனால், அம்பேத்கரின் புகழை எடுத்து செல்வதில் பாஜகவினருக்கு நிகர் யாருமில்லை...

விசிக
2 நாட்களுக்கு முன்பு மதுரையில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவின் போது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற எங்களது கட்சியினர் மீது விடுதலை சிறுத்தைகளின் குண்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

செல்வாக்கு
விசிக வடமாவட்டங்களில் செல்வாக்கை இழந்ததால்தான் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.. இதை பொறுக்க முடியாத அந்த கட்சியினர் வேண்டுமென்றே எங்களது கட்சி தொண்டர்களை- நிர்வாகிகளை தாக்குகின்றனர். அரக்கோணம் சம்பவத்தை திமுகவும், விசிகவும் சாதி பிரச்சினையாக்க முயல்கிறார்கள்.. அதனால் விசிக மீதான கண்காணிப்பை காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.
-
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம்












Click it and Unblock the Notifications