Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் இணைந்த ஓராண்டிலேயே விலகிய மதுரை சரவணன்! மீண்டும் திமுகவில் ஐக்கியமா? முழுபின்னணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார். இவர் மீண்டும் திமுகவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் டாக்டர் சரவணன். இவர் மதுரையில் மருத்துவமனை நடத்தி வரும் நிலையில் பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்து செயல்பட துவங்கினார்.

இந்நிலையில் தான் நேற்று மதுரையில் நடந்த சம்பவத்தால் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் ஒரு கட்சியில் இருந்து விலகுவதை கடந்த காலத்திலும் செய்துள்ளார். அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

பாஜகவில் விலகுவதாக அறிவித்த சரவணன்

பாஜகவில் விலகுவதாக அறிவித்த சரவணன்

அதாவது காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் லட்சுமணனுக்கு விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜகவினருக்கும் இடையே லேசான மனஸ்தாபம் வந்தது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு பழனிவேல் தியாகராஜனை அவரது வீட்டில் சந்தித்த டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மதிமுக, பாஜக, திமுகவில் ஐக்கியம்

மதிமுக, பாஜக, திமுகவில் ஐக்கியம்

இந்நிலையில் தான் இவர் பாஜகவில் சேர்ந்து ஓராண்டு மட்டுமே கடந்த நிலையில் அதில் இருந்து விலகி உள்ளார். அதாவது டாக்டர் சரவணன் மதிமுகவில் செயல்பட்டு வந்தார். மதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த இவர் கடந்த 2015ல் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு 2016ல் முகஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவின் மருத்துவ அணியின் துணை தலைவராக செயல்பட்டு வந்தார்

திமுகவில் எம்எல்ஏவான சரவணன்

திமுகவில் எம்எல்ஏவான சரவணன்

2017ல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் அதிமுகவின் ஏகே போஸ் வெற்றி பெற்றார். ஆனால் அவர் காலமானதால் மீண்டும் 2019ல் தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் தொகுதியை அதிமுக கண்டுக்கொள்ளாததால் அதன்பிறகு அவர் தனது சொந்த நிதியை செலவழித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் நலத்திட்டங்களை செய்தார். குறிப்பாக கொரோனா சமயத்தில் உதவிகள் செய்தார்.

சீட் மறுப்பால் பாஜகவுக்கு தாவினார்

சீட் மறுப்பால் பாஜகவுக்கு தாவினார்

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுகவின் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் சரவணனுக்கு அந்த தொகுதியில் சீட் மறுக்கப்பட்டது. இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து விலகிய அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த அடுத்த சில மணிநேரத்தில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட டாக்டர் சரவணனுக்கு பாஜகவில் சீட் வழங்கப்பட்டது. இருப்பினும் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

மீண்டும் திமுகவில் ஐக்கியமா?

மீண்டும் திமுகவில் ஐக்கியமா?

அதன்பிறகு கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும் சரவணன் நீண்டநாள் பாஜகவில் நீடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் இன்று திடீரென்று சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் இன்று பாஜக தலைவரிடம் வழங்க உள்ளார். பாஜகவில் இருந்து விலகிய சரவணன் மீண்டும் திமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+