மீண்டும் கே.பாலகிருஷ்ணன்..மா.கம்யூனிஸ்ட் செயலாளராக தேர்வு..சு.வெங்கடேசன், பாலபாரதிக்கு புதிய பதவி
மதுரை : மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது மாநில மாநாடு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் படி கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு பொறுப்பில் இருந்து அ.சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநாட்டில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 21ஆவது மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக சு.வெங்கடேசன், கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், ஜி.சுகுமாறன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications