மதுரை கோயில் நகரமாக இருந்தால் போதுமா? தொழில் நகரமாக்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: மாநிலம் சிறப்பாக இருந்தால்தான் முதலீடுகள் கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். தூங்கா நகரம் என்று கூறுவதை விட விழிப்புடன் இருக்கும் நகரம் என்றே மதுரையை கூறலாம் எனவும்,முதலீடுகள் சாதாரணமாக கிடைத்துவிடாது. ஒரு மாநிலம் சிறப்பாக இருந்தால்தான் நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாநிலம் சிறப்பாக இருந்தால்தான் முதலீடுகள் கிடைக்கும்: தூங்கா நகரம் என்று கூறுவதை விட விழிப்புடன் இருக்கும் நகரம் என்றே மதுரையை கூறலாம்: முதலீடுகள் சாதாரணமாக கிடைத்துவிடாது; ஒரு மாநிலம் சிறப்பாக இருந்தால்தான் நிறுவனங்கள் முதலீடு செய்யும்.

சட்டம், ஒழுங்கு தொழிலுக்கு உகந்த சூழல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தே நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு உள்ளது. ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம்.மதுரை கோயில் நகரமாக இருந்தால் மட்டும் போதுமா? தொழில் நகரமாக மாற்ற வேண்டும்.
பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழில்களை மதுரையில் நிறுவியுள்ளன. மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை. மேலூரில் 278.26ஏக்கரில் பிரமாண்ட சிப்காட் தொழில் நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். நாட்டிலேயே அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.. என்று கூறினார்.












Click it and Unblock the Notifications