எலித் தொல்லை தாங்க முடியலை.. மெஷினை கடிச்சு வச்சுரப் போகுது.. பதறும் மதுரா வேட்பாளர்!
மதுரா: "வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து உள்ளது; அறையை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்," என்று மதுரா தொகுதி வேட்பாளர் நரேந்திர சிங் கோரியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்றத் தொகுதிக்கு கடந்த மாதம் 18ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளர் நடிகை ஹேமா மாலினி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஷ்ட்ரீய லோக் தளத்தின் சார்பில் நரேந்திர சிங் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், மதுரா தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்குள்ள உள்ள மண்டி சமிதி பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மைய கட்டடத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் கட்டடத்தில் எலிகள் தொல்லை அதிகம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது." வாக்குப்பதிவு எந்திரங்களை எலிகள் சேதப்படுத்திவிடும் ஆபத்து இருக்கிறது என்று நரேந்திர சிங் கவலை தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக, மூன்று நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த புகாரைடுத்து தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சர்வக்ய ராம் மிஸ்ரா வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள அறையை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். நேற்று மூன்றாவது நாளாக பார்வையிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் எந்த ஆபத்தும் இல்லை. வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கட்டிட வளாகத்தில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது," என்று ராம் மிஸ்ரா கூறினார்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மதுரா தொகுதி வேட்பாளரின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications