Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் டீமா? முடியாது! பிரதமரை வரவேற்க அனுமதி மறுப்பு! குஷியான இபிஎஸ் கோஷ்டி! யார் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரை விமான நிலையத்தில் பிரதமரை சந்திக்க இபிஎஸ் தரப்பில் 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பில் அவரைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச் சாலையில் சின்னாளபட்டி பகுதியில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலைக் கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து மதுரை வரும் பிரதமர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மதுரையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வர இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இதையொட்டி காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஹெலிபேட் அமைக்கப்பட்டது. பிரதமர் வருகைக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் தற்போதைய ஹெலிபேடில் ஹெலிகாப்டரை இறங்க வைத்து மீண்டும் சோதனை நடைபெற்றது. பிரதமர் வருகையையொட்டி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஐஜி, டிஐஜி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் மாஸ்

மதுரையில் மாஸ்

பெங்களூருவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக பிரதமர் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து சாலை மார்க்கத்தில் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் தாரை தப்பட்டைகள் முழங்க பிரதமரை வரவேற்க தயாராகி வருகின்றனர். கடும் மழையிலும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு

எடப்பாடி பழனிசாமி தரப்பு

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மதுரைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எடப்பாடி நிச்சயம் பிரதமரை சந்திப்பார் என தம்பிதுரை கூறியிருந்த நிலையில் இருவரையும் பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அவரை வரவேற்பதற்காக 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அதிருப்தி

ஓபிஎஸ் அதிருப்தி

அதே நேரத்தில் ஓ,பன்னீர்செல்வத்தை தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் மாநிலங்களவை உறுப்பினரான தருமர், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்டோர் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு நிலையில் ஓபிஎஸ்சை தவிர மற்ற யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் அவர்களை வெளியேறுமாறு பாதுகாப்பு படையினர் கூறியதாக கூறப்படுகிறது, இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+