Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகம் முழுவதும் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு..இருளில் தவித்த மாணவர்கள்... ஏன் என்னாச்சு

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. கிராமங்களில் மின் தடை நீடிப்பதால் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். தேர்வு நேரங்களில் படிக்கும் மாணவர்கள் மின்சாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளானதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Recommended Video

    தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்வெட்டு..காரணங்கள் | Oneindia Tamil

    பகல் நேரங்களில் அக்னி வெயில் போல அனலடிக்கும் வெப்பத்தில் தவிக்கும் மக்களுக்கு திடீர் மின்வெட்டு கடும் சிரமத்தை தருகிறது. அதே போல மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் ஏற்படும் மின்வெட்டு பிரச்சினையால் வயதானவர்களும் குழந்தைகளும் புழுக்கத்தில் சிக்கி தவிப்பதோடு பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கடந்த சில நாட்களாகவே மின்சாரம் தடைபடுகிறது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், உறையூர், ராஜா காலனி, கருமண்டபம் மற்றும் பாலக்கரை உள்ளிட்ட பல இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவியது. பகல் நேரம் மட்டுமன்றி இரவிலும் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மின்வெட்டினால் தவிப்பு

    மின்வெட்டினால் தவிப்பு

    அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், புழுக்கம் தாங்காமல், வீட்டிற்கு வெளியே அமர்ந்து விசிறிகளை வீசி சமாளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதே போன்று வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    கடலூரில் சூழ்ந்த இருள்

    கடலூரில் சூழ்ந்த இருள்

    கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் மின்வெட்டு நிறுத்தப்பட்டு பத்து மணி அளவில் மீண்டும் கொடுக்கப்பட்டது. இதேபோல் பண்ருட்டி, விருதாச்சலம், நெல்லிக்குப்பம் நெய்வேலி, உள்ளிட்ட பல பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால் இருள் சூழ்ந்து தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மெழுகுவர்த்தியின் துணையை நாடினர்.

     விவசாயிகள் தவிப்பு

    விவசாயிகள் தவிப்பு

    சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளான வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருமுல்லைவாசல், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் இருந்து தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. ஏசி ,மின் விசிறி இயங்காத காரணத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வெளியில் வந்து அமர்ந்திருந்தனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் இருள் சூழ்ந்தது.விவசாயிகளும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஊரில் மின்வெட்டு

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஊரில் மின்வெட்டு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு நகரப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், கிராமப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் இரவு பத்தரை மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு நள்ளிரவு ஒரு மணியைக் கடந்தும் மின்சாரம் வராததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

    தென் மாவட்டங்களில் தவிப்பு

    தென் மாவட்டங்களில் தவிப்பு

    தூத்துக்குடி நகர் பகுதி மற்றும் வாகைக்குளம், தெய்வச் செயல்புரம், சாத்தான்குளம், உடன்குடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பல இடங்களில் மின்வெட்டு தொடர்ந்தது. இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை, தொடர்ந்து அறிவிக்கபடாத மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நோயாளிகள், குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மின் விசிறி இயக்க முடியாமல் புழுக்கத்தில் தவித்தனர்.

    மின்வெட்டுக்கு காரணம்

    மின்வெட்டுக்கு காரணம்

    அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    மின்பற்றாக்குறையை சமாளிக்க

    மின்பற்றாக்குறையை சமாளிக்க

    மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகா வாட் திடீரென தடைபட்டதே இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க மின் வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொதுத்தேர்வு நேரத்தில்

    பொதுத்தேர்வு நேரத்தில்

    பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் சில வாரங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இரவு நேரங்களிலும் அதிகாலையிலும் எழுந்து படித்து வருகின்றனர். எனவே மின்வெட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பது பெற்றோர்களின் வலியுறுத்தலாகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+