விரலில் வைத்த மை அழிகிறது...குற்றஞ்சாட்டும் மதுரை வாக்காளர்கள் - தேர்தல் அதிகாரிகள் விளக்கம்
மதுரை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் விரலில் வைக்கப்படுகின்ற அடையாள மை அழிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தரமற்ற மையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மதுரையில் வாக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் காலை ஆறு முப்பது மணிக்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்பாக சோதனை வாக்குப்பதிவு நடைபெற்றது.

7 மணிக்கு வாக்குப்பதிவு
மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ஐந்து வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

மை அழிவதாக புகார்
மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 29ஐ சேர்ந்த பாரிஜாதம் என்ற வாக்காளர் தான் அதிகாலையிலேயே வந்து வாக்கு செலுத்தியதாகவும், ஆனால் தனது விரலில் வைக்கப்பட்ட அடையாள மை உடனடியாக அழிந்து விட்டதாகவும் தரமற்ற மையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் அதிகாரிகள் விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் அதிகாரிகள், பொதுவாக ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் வாக்கு செலுத்த வருகின்ற வாக்காளர்களின் விரல்களை துணியால் துடைத்து சுத்தம் செய்து பிறகு கருப்பு மை ஆட்காட்டி விரலில் வைப்பது வழக்கம். இந்த மையை வைத்தவுடன் ஐந்து வினாடிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளரின் கைவிரலை பிடித்திருப்பது வழக்கமான ஒன்று.

மை அழிந்தது எப்படி
இந்த நடைமுறை பின்பற்றப்படாததால் உடனடியாக இந்த மை அழிய வாய்ப்பு உண்டு எனவும் அதனை உடனடியாக அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அங்கு உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications