மும்பையில் பிரபல நடிகை பாலியல் புகார்.. தயாரிப்பு நிர்வாகி கைது.. அடுத்தடுத்து புகார்கள்
மும்பை: மகராஷ்டிராவில் பிரபல மராத்தி தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பு நிர்வாகி தனக்கு பாலியல் தொல்லை தருவதாக நடிகை ஒருவர் அளித்த புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தன்னுடன் பணிபுரியும் சக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தற்கொலைக்கு தூண்டும் வகையில் பாலியல் தொல்லை தருவதாக ஏற்கனவே 'சஹ்குடும்ப் சஹாபரிவார்' தொடரின் நடிகை குற்றம்சாட்டி இருந்தார்.
தற்போது அதே தொடரின் மற்றொரு நடிகை ஸ்வாதி பதாவே போலீசில் அளித்த புகாரில் தயாரிப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது.

மராத்தி தொடர் நடிகை புகார்
மகராஷ்டிரா மாநிலத்தில் பிரபல மராத்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவது 'சஹ்குடும்ப் சஹாபரிவார்' தொடர். இந் நிகழ்ச்சியின் துணை நடிகையான ஸ்வாதி பதாவே அவர் பணிபுரியும் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிர்வாகி ஸ்வப்னில் லோகாண்டே மீது கோரேகான் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தான் பணிபுரியும் நிகழ்ச்சியில் நந்திதா பட்கருக்கு டூப்பாக நடித்து வருகிறேன். நான் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் ஒரு முண்ணனி நடிகைக்கு டூப்பாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சில நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் சூட்டிங்கின்போது நந்திதா பட்கர் தாமதமாக வந்தால் அந்த சமயங்களில் அவரது கதா பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

ஆதாயமாக பாலியல் உறவு
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிர்வாகி என்னிடம் அணுகி, புனேயில் சூட்டிங் இருப்பது வசதியாக இருக்கிறதா எனக்கேட்டார். நான் அதற்கு ஆமாம் மிகவும் பிடித்திருக்கிறது என்றேன். பின்னர் சினிமாவில் நிறைய பேரை தெரியும் என்றும். நான் சம்மதித்தால் வாய்ப்புகள் வாங்கி தருவதாகவும் ஸ்வப்னில் என்னிடம் கூறினார். அப்படி பட வாய்ப்புகள் வேண்டுமென்றால் தனக்கு தேவையான ஒன்றை தரவேண்டும் என என்னிடம் கேட்டார். நான் அதற்கு பணம் தருகிறேன் என்றேன். ஆனால் அவர் பணம் வேண்டாம் என்றும் அவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்ள வேண்டும் என்றும் கேட்டார்.

தயாரிப்பு நிர்வாகி கைது
இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் கிரைம் பட்ரோல் மற்றும் மராத்தி நிகழ்ச்சிகள் உட்பட பல இந்தி தொலைக்காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு அனுபவத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எனவே ஸ்வப்னில் தன்னிடம் அணுகிய விதங்களை ஆதாரத்துடன் கோரேகான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதையடுத்து போலீசார் ஸ்வப்னில் லோகாண்டே மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சி என ஸ்வாதி பதாவே தெரிவித்தார்.

மற்றொரு நடிகையும் புகார்
இந்நிகழ்ச்சியின் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தற்கொலைக்குத் தூண்டும் வகையில், பாலியல் தொல்லை தருவதாக மூத்த நடிகை அன்னபூர்ணா விட்டல் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications