"டி கேங்க்".. கடனை திரும்பகேட்ட பெண் எழுத்தாளர் பலாத்காரம்! பின்னணியில் தாவூத் இப்ராஹிம் கும்பல்?
மும்பை: மும்பையில் ரூ.2 கோடி கடனை திரும்ப கேட்ட நிலையில் 75 வயது தொழிலதிபர், 35 வயது பெண்ணை பலாத்காரம் செய்து நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயரில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜூகு பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். எழுத்தாளர். இவரிடம் 75 வயது நிரம்பிய தொழில் அதிபர் ரூ.2 கோடி கடன் வாங்கியிருந்தார்.
நீண்ட நாட்களாக ஆகியும் இந்த கடனை அவர் திரும்ப செலுத்தவில்லை. இதனால் கோபமடைந்த பெண் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டு வந்தார். இருப்பினும் ஏதாவது காரணத்தை கூறி அந்த தொழில்அதிபர் சமாளித்து வந்தார்.

கடனை திரும்ப கேட்ட எழுத்தாளர்
இருப்பினும் பெண் எழுத்தாளர் விடவில்லை. தொடர்ந்து கடன் பணத்தை திரும்ப கேட்டு வந்தார். இந்நிலையில் தான் அந்த தொழில்அதிபர் மும்பை ஜூகு பகுதியில் உள்ள ‛பைவ்ஸ்டார்' ஓட்டலுக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி எழுத்தாளரிடம் கூறினார். இதையடுத்து பணத்தை வாங்கும் நோக்கத்தில் எழுத்தாளர் ஓட்டலுக்கு சென்றார்.

பலாத்காரம்; கொலை மிரட்டல்
அங்கு வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே பெண் எழுத்தாளரை, தொழில்அதிபர் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மூலம் கொலை செய்து விடுவதாக செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

போலீசில் புகார்
இதற்கிடையே எழுத்தாளருக்கு போன் செய்த நபர், தாவூத் இப்ராஹிம் பெயரில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது தொழில் அதிபருக்கு எதிராக போலீசில் ஏதேனும் புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன பெண்எழுத்தாளர் பாதுகாப்பு கருதிஅம்போலி போலீசில் புகார் செய்தார்.

விசாரணை; அதிர்ச்சி
ஆனால் சம்பவம் எம்ஐடிசி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால் வழக்கு அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். இதற்கிடையே கடனை திரும்ப கேட்ட பெண் எழுத்தாளரை பலாத்காரம் செய்து, தாவூத் இப்ராஹிம் பெயரில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications