Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண மோசடி..தாவுத் இப்ராஹிமுடன் தொடர்பு? மகராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைதால் பரபரப்பு..உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஆகவும் மகாராஷ்டிர மாநிலத்தின் சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் நவாப் மாலிக் இன்று அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ சமீபத்தில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுத்தது.

தாவுத் இம்ராஹிமின் உறவினர்கள், கூட்டளுக்குச் சொந்தமான இடங்கள், வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், தாவுத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர், சகோதரி ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரித்து.

திடீர் சோதனை

திடீர் சோதனை

விசாரணையில் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், ரியல் எஸ்டேட் போன்றவை மூலம் கிடைத்த பணம் தாவூத் இப்ராகிமுக்கு ஹவாலா முறையில் அனுப்பப்பட்ட எண்ணை கண்டுபிடித்து நிலையில் இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வழக்கில் எதிர்பாராதவிதமாக இன்று காலை 6 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மை விவகார துறை அமைச்சர் நவாப் மாலிக் வீட்டில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

நவாப் மாலிக் கைது

நவாப் மாலிக் கைது

வீட்டில் சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தனர். விசாரணையில் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் நவாப் மாலிக் இருந்ததாகவும் இதன் மூலம் கிடைத்த பணத்தில் பல ஏக்கர் நிலங்களை நவாப் மாலிக் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அந்த அடிப்படையில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

ஆனால் விசாரணையில் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. அமலாக்கத்துறை கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி மிரட்டுவதாக குற்றம்சாட்டி வரும் நிலையில் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டு வெளியே அழைத்து வரப்பட்ட நவாப் மாலிக் செய்தியாளர்களைப் பார்த்து நான் தலை வணங்க மாட்டேன் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம் அனைவரையும் அம்பலப்படுத்துவேன் என்று முழக்கமிட்டார்.

நீதிபதியிடம் புகார்

நீதிபதியிடம் புகார்

தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தன்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாகவும், விசாரணைக்கு முதலில் சம்மன் அனுப்பி இருக்க வேண்டுமானால் நடைமுறைகளைப் பின்பற்றாமல் என்னை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர் என நீதிபதி முன் நவாப் மாலிக் புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+