பண மோசடி..தாவுத் இப்ராஹிமுடன் தொடர்பு? மகராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைதால் பரபரப்பு..உண்மை என்ன?
மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஆகவும் மகாராஷ்டிர மாநிலத்தின் சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் நவாப் மாலிக் இன்று அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ சமீபத்தில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுத்தது.
தாவுத் இம்ராஹிமின் உறவினர்கள், கூட்டளுக்குச் சொந்தமான இடங்கள், வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், தாவுத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர், சகோதரி ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரித்து.

திடீர் சோதனை
விசாரணையில் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், ரியல் எஸ்டேட் போன்றவை மூலம் கிடைத்த பணம் தாவூத் இப்ராகிமுக்கு ஹவாலா முறையில் அனுப்பப்பட்ட எண்ணை கண்டுபிடித்து நிலையில் இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வழக்கில் எதிர்பாராதவிதமாக இன்று காலை 6 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மை விவகார துறை அமைச்சர் நவாப் மாலிக் வீட்டில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

நவாப் மாலிக் கைது
வீட்டில் சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தனர். விசாரணையில் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் நவாப் மாலிக் இருந்ததாகவும் இதன் மூலம் கிடைத்த பணத்தில் பல ஏக்கர் நிலங்களை நவாப் மாலிக் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அந்த அடிப்படையில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பெரும் பரபரப்பு
ஆனால் விசாரணையில் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. அமலாக்கத்துறை கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி மிரட்டுவதாக குற்றம்சாட்டி வரும் நிலையில் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டு வெளியே அழைத்து வரப்பட்ட நவாப் மாலிக் செய்தியாளர்களைப் பார்த்து நான் தலை வணங்க மாட்டேன் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம் அனைவரையும் அம்பலப்படுத்துவேன் என்று முழக்கமிட்டார்.

நீதிபதியிடம் புகார்
தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தன்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாகவும், விசாரணைக்கு முதலில் சம்மன் அனுப்பி இருக்க வேண்டுமானால் நடைமுறைகளைப் பின்பற்றாமல் என்னை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர் என நீதிபதி முன் நவாப் மாலிக் புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications