சிவசேனாவுடன் கூட்டணி இல்லை.. சரத் பவார் அதிரடி அறிவிப்பு.. மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு
Recommended Video
மும்பை: சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று சரத் பவார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பிருந்தே, பாஜகவுடன், சிவசேனா கூட்டணி அமைத்து இருந்தாலும் கூட, தற்போது திடீரென முதல்வர் பதவியை தங்களுக்கு விட்டு தர வேண்டும் என்று சிவசேனா போர்க்கொடி தூக்கி வருவதால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் வருகிறது.

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை பெறும் என்று யூகங்கள் பரவியிருந்தன.
சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஏற்கனவே ஒரு முறையும், இன்று மற்றொரு முறையும், என, சரத் பவாரை இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த யூகங்கள் மேலும் அதிகரித்தன.
ஆனால் சஞ்சய் ராவத் உடனான சந்திப்பு பிறகு இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் சரத்பவார். அப்போது அவர் கூறுகையில், சஞ்சய் ராவத் உடனான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது. மரியாதை நிமித்தமானது மட்டுமே.
அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை இணைந்து விரைவிலேயே அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசையில் அமரும்.
பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு தான் மக்களின் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் அதை ஏற்று நடக்க வேண்டும். தேசியவாத காங்கிரசை பொறுத்தளவில் அரசியல் சாசன இக்கட்டு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறது.
சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி என்ற பேச்சு எங்கே இருந்து வந்தது? சிவசேனாவும் பாஜகவும் கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் கூட்டாளிகளாக இருந்து வருகிறார்கள், மறுபடியும் கூட அவர்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து சிவசேனா அடுத்து எந்த பக்கம் செல்வது என்று புரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தொடரச் செய்து, கூட்டணி ஆட்சியை அமைக்குமா அல்லது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படப்போகிறதா என்பது அடுத்தடுத்த நாட்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேள்விகளாக மாறியுள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications