தனித்தீவான மும்பை.. எங்கு பார்த்தாலும் மழை நீர்.. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
மும்பை: மகாராஷ்டிரத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் மழை பாதிப்பில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகிவிட்டனர்.
மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மும்பையில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. இதனால் அந்தேரி, மலாட், தஹிசார் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

30 நிமிடங்கள்
மும்பை சென்ட்ரலில் இருந்து துறைமுகம் செல்லும் வழித்தடத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய விமானங்கள் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.

மக்கள் வெளியேற்றம்
நவி மும்பையில் உள்ள பாண்டவ்கடா நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற 4 கல்லூரி மாணவிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். மும்பை கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ரயில்கள் தாமதம்
தானேவில் கனமழையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாகுர்வாடி- மங்கி ஹில்ஸ் இடையேயான ரயில் வழித்தடத்தில் பாறாங்கற்கள் விழுந்தன. இதையடுத்து சென்னை விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், டெக்கான் கியூன் மற்றும் கொனார்க் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

ரெட் அலர்ட்
பால்கர், தானே, ராய்கட், நாசிக், புனே, சடாரா ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிர மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications