ஓடிடி தளங்களில் இருப்பது ஆபாச படம்..என் கணவர் தயாரித்தது கவர்ச்சி படம்.. ஷில்பா ஷெட்டி புது விளக்கம்
மும்பை: தனது கணவர் ஆபாசப் படங்களைத் தயாரிக்கவில்லை கவர்ச்சி படங்களையே தயாரித்தார் எனத் தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, அதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.
பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாகக் கைது செய்தனர்.
ஆபாச படங்களைத் தயாரித்து, அதைச் செயலிகள் மூலம் வெளியிட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவரை மும்பை போலீசார் இப்போது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ராஜ் குந்த்ரா
ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதை ஹாட்ஷாட்ஸ் என்ற செயலி மூலம் விநியோகம் செய்ததாக ராஜ் குந்த்ரா மீது மும்பை போலீசார் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ராவிடம் தற்போது மும்பை போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

லாபத்தில் பங்கில்லை
இந்நிலையில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் நேற்று சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த செயலி மூலம் கிடைத்த வருவாயில் எந்தவொரு பங்கையும் தான் எடுத்துக் கொள்ளவில்லை என்று ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், ஹாட்ஷாட்ஸ் செயலியில் என்ன மாதிரியான வீடியோக்கள் விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Array
மற்ற ஒடிடி தளங்களில் வரும் படங்களும், வெப் சீரிஸ்களும் மிகவும் ஆபாசமான காட்சிகளைக் கொண்டுள்ளதாகவும் ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார், மேலும், தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச திரைப்படங்களைத் தயாரிக்கவில்லை என்றும் அவர் கவர்ச்சி படங்களையே தயாரித்தார் என்றும் கூறியுள்ளார். ஆபாசப் படங்களுக்கும் கவர்ச்சி படங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் அவர் விளக்கியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மும்பை போலீசார்
முன்னதாக ராஜ் குந்த்ரா கைது குறித்து மும்பை போலீசார் கூறுகையில், "வெப் சீரியஸ் மற்றும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகப் புதுமுக நடிகைகளிடம் கூறி, அதற்கான ஆடிஷன் எனக் கூறி இதுபோன்ற காட்சிகளில் நடிக்கச் சொல்லி படமாக்கியுள்ளனர். அவர்களை நிர்வாணமாகக் கூட படமாக்கியுள்ளனர். அவர்களில் சிலர் இது தொடர்பாக குற்றப்பிரிவில் புகார் அளித்தனர், அதன் அடிப்படையிலேயே ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ராஜ் குந்த்ரா குற்றவாளி என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications