மும்பையில் குழாயடிச்சண்டை: குடிநீர் பிடிக்கும் தகராறில் அண்ணனின் மனைவியை வெட்டிக்கொன்ற தம்பி
மும்பையில் குடிநீருக்காக நடந்த குழாயடிச்சண்டை கொலையில் முடிந்துள்ளது. அண்ணனின் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார் தம்பி.
மும்பை: தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நிகழலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ஆங்காங்கே குழாயடிச்சண்டைகளும் அரங்கேறி அடிதடியில் முடிகின்றன.
ஒரே வீட்டில் பங்காளிகளாக வசிக்கும் அண்ணன் தம்பிகள் கூட தண்ணீரை பங்கிட்டுக்கொள்வதில் தகராறு செய்கின்றனர். தண்ணீரை யாரும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அந்த அளவிற்கு தண்ணீர் பிரச்சினை இந்தியா முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

மும்பையில் தண்ணீர் பங்கீடு தகராறு கொலையில் முடிந்துள்ளது. தன் அண்ணனின் மனைவி என்றுகூட பாராமல் கொழுந்தன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பலியான பெண்ணின் பெயர் நமிதா போகரே என்பதாகும்.
முன்பையின் மேற்கு பகுதியில் ஒரு பொதுக் குழாயில் தண்ணி பிடிக்கும் போது அண்ணிக்கும் கணவரின் தம்பிக்கும் இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சு முற்றி சண்டையானது. ஒரு குடம் கூட அதிகம் பிடிக்க விடமாட்டேன் என்று சண்டை போட்ட அண்ணியை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
இறந்த பெண்ணின் கணவர் தனது தம்பி மீது போலீசில் புகார் அளித்தார். தன் மனைவிக்கும் தம்பிக்கும் தண்ணீர் பிடிக்கும்போது இடையே ஏற்பட்ட பிரச்சினையில் தன்னுடைய மனைவியை தன் தம்பி அரிவாளால் வெட்டி கொலைசெய்யப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர போலீஸ் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் விதிப்படி, 302, 37 (1) (ஏ) மற்றும் 135 பிரிவுகளின் கீழ் எப் ஐ ஆர் பதிவு செய்து போலீஸார் கொலையாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு அன்றாடம் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காததால் நாட்டின் பல பகுதிகள் கடுமையானதண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் பங்கை பெற தங்களுக்குள் எந்த உறவுமுறையும் பார்க்காமல் சண்டையிட்டு போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அரசாங்கம் தான் இதற்கான தீர்வை கொண்டு வந்து அப்பாவி மக்களை காப்பாற்றவேண்டும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications