கொரோனா வேக்சின் டோஸ்களின் இடைவெளியை அதிகரிப்பது.. ஆபத்தை ஏற்படுத்தும்.. எச்சரிக்கும் "பவுச்சி"!
நியூயார்க்: கொரோனா வேக்சின் டோஸ்களின் இடைவெளியை அதிகரிப்பது ஆபத்து ஏற்படுத்தலாம். இதனால் புதிய வகை உருமாறிய கொரோனா தாக்கலாம் என்று அமெரிக்கா அதிபர் சுகாதார ஆலோசகர் டாக்டர் ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வேக்சின் டோஸ்களுக்கு இடையிலான காலஇடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவிட்ஷீல்ட் வேக்சினின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் 6-8 வாரங்கள் இடைவெளியில் போடப்பட்ட நிலையில் 12-16 வாரங்கள் இடைவெளியில் இதை போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் 6 மாதங்களுக்கு பின்பே வேக்சின் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அறிவுரை
இந்த நிலையில் கொரோனா வேக்சின் டோஸ்களின் இடைவெளியை அதிகரிப்பது ஆபத்து ஏற்படுத்தலாம், என்று அமெரிக்கா அதிபர் சுகாதார ஆலோசகர் டாக்டர் ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பொதுவாக வேக்சின் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம். இதனால் புதிய வகை உருமாறிய கொரோனா தாக்கலாம்.

கொரோனா
முக்கியமான எம்ஆர்என்ஏ வகை வேக்சின் டோஸ்களை அதிக இடைவெளியில் போட கூடாது. பைசர் வேக்சின் டோஸ்களை 3 வார இடைவெளியிலும் , மாடர்னா வேக்சின் டோஸ்களை 4 வார இடைவெளியிலும் போட வேண்டும். யுகேவில் அதிக இடைவெளிவிட்டு வேக்சின் போட்டார்கள். அதுவே சிக்கலாக முடிந்தது. அதே சமயம் போதிய வேக்சின் இல்லாத போது வேறு வழியில்லை.
Recommended Video

வேக்சின்
டெல்டா வகை கொரோனா மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் வேகமாக பலரிடம் பரவி வருகிறது. டெல்டா வகை கொரோனா இருக்கும் நாடுகள் எல்லாமே அதிக கவனமாக இருக்க வேண்டும். இதனால் கேஸ்கள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

வேக்சின் இல்லை
முக்கியமாக வேக்சின் போதிய அளவில் போடாத நாடுகள் டெல்டா வகை கொரோனா மூலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. வேக்சின் போடாத மக்கள் இடையே டெல்டா வகை கொரோனா அதிகம் பரவும் ஆபத்துகள் உள்ளன. தற்போது யுகேவில் இதே போல்தான் டெல்டா வகை கொரோனா அதிகமாக பரவுகிறது என்று ஆண்டனி பவுச்சி எச்சரித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications