பாரீஸ் ஒப்பந்தத்தை சரியாக பின் பற்றும் இந்தியா.. சுற்றுச்சூழலை அதிகம் பாதுகாத்துள்ளோம்- மோடி பேச்சு
பாரீஸ்: இந்தியா தனது பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பாதையில் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி, டிசம்பர் 12ம் தேதி நடைபெற்ற 2020 ஆம் ஆண்டு காலநிலை லட்சிய உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த உச்சிமாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை, பிரிட்டன், பிரான்ஸ், சிலி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தியது. உலகளாவிய காலநிலை மாற்றத்தை சமாளிக்க தலைவர்களை, அரசுகளை, வணிக மற்றும் சிவில் சமூகம் முழுவதையும் இணைத்து செயல்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இதில் பேசிய மோடி, 2005 ஆம் ஆண்டை விட இந்தியா, தனது மாசுவை 21 சதவீதம் குறைத்துள்ளது. இந்தியாவின் சூரிய மின்சக்தி திறன் திறன் 2014ல் 2.63 ஜிகாவாட்டாக இருந்தது. 2020ல் 36 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது என்றார்.
இந்த உச்சிமாநாடு பாரிஸ் ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தின் பெரிய ஒரு முயற்சிதான் இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் இணைந்ததாகும்.
இன்று, நாங்கள் எங்கள் குறிக்கோளை இன்னும் உயர்த்த முயற்சித்துக்கொண்டு இருக்கிறோம். இந்தியா தனது பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பாதையில் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளுக்கு மேலாக சாதித்துள்ளது என்றும் மோடி கூறினார்.
India is not only on track to achieve its Paris Agreement targets but to exceed them beyond expectations: PM Narendra Modi at the Climate Ambition Summit 2020 pic.twitter.com/iJ9UZE9vUO
— ANI (@ANI) December 12, 2020
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா 2015ம் ஆண்டு கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
"எங்கள் வனப்பகுதியை விரிவுபடுத்துவதிலும், பல்லுயிரியலைப் பாதுகாப்பதிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், உலக அரங்கில், இந்தியா இரண்டு முக்கிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. சர்வதேச சோலார் சக்தி கூட்டணி மற்றும் பேரழிவு தடுக்கும் உள்கட்டமைப்பிற்கான கூட்டணி" என்று மோடி மேலும் தெரிவித்தார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications