Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சத்தில் விலைவாசி.. ஆனால் எதிர்க்கட்சிகளை பழிவாங்க தீவிரம்.. பாஜகவுக்கு நாராயணசாமி கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: விலைவாசி உயர்வு பிரச்னையில் கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத் துறையை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உட்பட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து கரிகுடோனில் அடைத்தனர்.

 நாராயணசாமி பேட்டி

நாராயணசாமி பேட்டி

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்கத் துறை மூலம் விசாரணைக்கு அழைத்து மரியாதையையும் குறைக்க வேண்டும். மக்கள் மத்தியில் அந்தக் கட்சியின் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

 பாஜக மீது விமர்சனம்

பாஜக மீது விமர்சனம்

ஆவணங்கள் அனைத்தும் தரப்பட்டாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, சோனியா காந்தியையே விசாரணைக்கு அழைத்துள்ளோம் என்ற ஒரு விளம்பரம் செய்கிறது. இந்த வழக்கின் முடிவில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று நிரூபிக்கப்படும். பாஜக அரசின் முகத்திரை கிழிக்கப்படும். அராஜகத்தை கடைப்பிடித்து, பண பலம், அதிகார பலத்தை வைத்து மாநில அரசுகளை கவிழ்க்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது.

 விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

பிரதமர் கவனம் செலுத்த வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளது. அரிசி, பருப்பு, கோதுமை சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. நாட்டில் 25 கோடிக்கும் அதிகமானோர் வேலைய இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதை பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

 இன்னும் சில காலம்

இன்னும் சில காலம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தொடர்பான விவாதம் நடத்த நாடாளுமன்றம் தொடர்ந்து 3 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி, மைதா, பால், தயிர் என மக்கள் தினமும் பயன்படுத்துகின்ற அத்தியாவசிய பொருட்களும் ஜிஎஸ்டி வரி போட்டு மக்களை துன்புறுத்தும் பாஜக அரசு தூக்கி எறியப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+