Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளுத்து வாங்கும் கனமழை.. புதுச்சேரி-காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. வெளியான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தென்மேற்கு பருவழை முடிந்து வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

கடந்த மாதம் 29ம் தேதி தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் கூட தற்போது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மழை

சென்னையில் மழை

குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏறக்குறைய சென்னையின் அனைத்து இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை நெற்குன்றத்தில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. மேலும் பல இடங்களில் கனிசமான அளவு மழை பெய்து இருந்தது.

காரைக்கால்-புதுச்சேரி மழை

காரைக்கால்-புதுச்சேரி மழை

இதேபோல் தமிழ்நாட்டின் பிற இடங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்து வருகின்றன. இந்த பகுதிகளில் இன்னும் சில நாட்கள் மழை பெய்யும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 நாளை கனமழைக்கு வாய்ப்பு

நாளை கனமழைக்கு வாய்ப்பு

அதன்படி நாளை(நவம்பர் 3) ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 3) மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+