நெஞ்சு பொறுக்குதில்லையே.. பராமரிப்பு இன்றி கிடக்கும் மகாகவி பாரதியாரின் நினைவு இல்லம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மகாகவி பாரதியாரின் நினைவகம் உரிய பராமரிப்பு இன்றி, சிதலமடைந்து வருகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


மகாகவி பாரதியார் 1908 முதல் 1918 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். பாரதியின் வாழ்வில் முக்கிய பகுதியாக கருதப்பட்ட இந்த காலகட்டத்தில்தான் இந்த வீட்டிலிருந்தவாறு குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை பாரதி படைத்தார்.


இத்தகையை பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பாரதியார் வசித்த வீட்டை புதுச்சேரி அரசு அருங்காட்சியகமாகவும், நூலகமாகவும் பராமரித்து வருகிறது. இங்கு பாரதி தங்கியிருந்தபோது எழுதிய கவிதைகளின் கையெழுத்து பிரதிகள், பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட பாரதியின் 17 ஆயிரம் புத்தகங்கள், கடிதங்கள், ஆவணங்கள், அரிய புகைப்படங்கள், அவர் அமர்ந்த இருக்கைகள், கட்டில்கள், குவளைகள், ஓலைச்சுவடிகள் என பல அபூர்வமான விஷயங்கள் இந்த நினைவகத்தில் உள்ளன.


இந்ந நினைவு இல்லத்தை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள், பள்ளி - கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் இங்கு வந்து செல்லும் நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு 1 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பாரதியாரின் இல்லம் தற்போது முகப்பில் காரைகள் பெயர்ந்தும், தரைகளில் உடைசல்கள் ஏற்பட்டும் சிதலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.


மேலும், இங்கு காவலாளிகள் இல்லாததால் இரவு நேரத்தில் பாரதி வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். எனவே அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு சிதலமடைந்த பகுதிகளை சரிசெய்து, அங்கு 24 மணி நேரமும் பாதுகாவலர்களை நியமித்து, கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் வலியுறுத்துகின்றனர்.


-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications