அறந்தாங்கியில் போதையில் அலப்பறை.. வாக்குச்சாவடியில் இ.வி.எம் மெஷினை அரிவாளால் உடைத்த 'குடி'மகன்!
புதுக்கோட்டை: அறந்தாங்கி அடுத்த ஆலங்குடியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 'குடி'மகன் அரிவாளால் வாக்குச்சாவடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியிலும், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை செய்து முடித்தனர்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இந்த மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அடுத்த ஆலங்குடியில் கிராமப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடியில் மக்கள் வாக்களித்து கொண்டிருந்தனர்.
அங்கு மதுபோதையில் கையில் அரிவாளுடன் வந்த வந்த வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் அலப்பறையில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கு ரகளையில் ஈடுபட்ட அந்த வாலிபர், மதுபோதையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஜன்னல் வழியாக அரிவாளால் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குடிபோதையில் தகராறு செய்த அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்(வயது 35) என்பது தெரியவந்தது. போலீசார் அந்த நபரை பிடித்து சென்றனர். குடிமகனின் ரகளையால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரான சார்ஆட்சியர் ஆனந்த்மோகன் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications