"அதிக விலைக்கு விக்கறாங்க.." புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை நோக்கி பாஜகவினர் நடத்திய முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழ்நாடு முழுக்க மதுபானங்கள் மாநில அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் டாஸ்மாக் மூலமே விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டுத் தரும் துறைகளில் இதுவும் ஒன்றாக எப்போதும் இருந்து வருகிறது.

டாஸ்மாக்
மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் டாஸ்மாக் அனுமதிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பரவலாகப் புகார்கள் உள்ளன. மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான கடைகளில் அதிக விலைக்கே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் உள்ளன.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 137 டாஸ்மார்க் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அனைத்து கடையிலுமே மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த டாஸ்மாக் நிர்வாகம் முயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கமிஷனாக கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ரூ. 10 அதிகம்
மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டில் மதுவுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைக் கண்டித்து, பாஜகவினர் மதுபான கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்றைத் தினம் முற்றுகை போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

திமுகவினருக்கு கமிஷன்
இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கூறுகையில், "தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று திமுக கூறியது. ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் குடிமகன்கள் மீது கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் திமுக நிர்வாகிகளுக்குப் பல கோடி ரூபாய் ஒரு நாளைக்குத் தமிழகம் முழுவதும் கமிஷனாக கிடைக்கிறது. உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை டாஸ்மாக் நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றனர்.

முற்றுகை போராட்டம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் கூடுதல் விற்பனையைத் தடுத்து நிறுத்த கோரியும் புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications