முழு ஊரடங்கு: அப்படியே சைக்கிளை எடுத்து.. 5 கி.மீ ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்.. வியந்து போன மக்கள்!
புதுக்கோட்டை: முழு ஊரடங்கு எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது? என்பதை அறிய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். கலெக்டர் ஒருவர் சைக்கிளில் செல்வதை பார்த்த பொதுமக்கள் வியந்து போனார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13,000-ஐ தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்டிவ் கேஸ்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

திடீரென சைக்கிளை எடுத்த கலெக்டர்
மக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து திடீரென சைக்கிளை எடுத்த அவர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர் கீழராஜவீதி, பால் பண்ணை, மகளிர் கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று ஆய்வு செய்தார்

5 கி.மீ சைக்கிளில் பயணம்
உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு மேற்கொண்டார். பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர்களிடம் விதிகளை மீறியவர்கள் மீது எவ்வளவு வழக்குகள் போடப்பட்டு உள்ளது? என்று கேட்டறிந்தார். மொத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிளில் சென்று ஆய்வு செய்த அவர் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றியவர்களிடம் ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வியந்து போன மக்கள்
முகக் கவசம் இல்லாமல் சாலைகளில் நடந்து வந்தவர்களிடம் மாஸ்க் அளித்து மாஸ்க் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அறிவுரை கூறினார் கலெக்டர் கவிதா ராமு. கலெக்டர் ஒருவர் சைக்கிளில் செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் வியந்து போனார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications