ஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்!
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழி ஒன்று அந்த மாவட்டம் முழுக்க தற்போது பேசுபொருளாகி பெரிய செய்தியாகி மாறியுள்ளது.
சேலம் மாவட்டம் அருகே இருக்கும் ரங்கமோவூர் பகுதியில் உள்ள கிராமம்தான் எருமைசாட்டுக்காடு. இந்த கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர்தான் தற்போது சேலம் முழுக்க வைரலாகி உள்ளார்.
அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வீடு பின்புறத்தில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டி இருக்கிறார். தனது மூன்று மகன்கள் உடன் தண்ணீர் தொட்டி அமைக்கப்பதற்காக இவர் குழி தோண்டும் பணியில் இருக்கிறார்.

விவசாய குடும்பம்
இவர்கள் குடும்பம் விவசாய குடும்பம் ஆகும். இதற்கான தண்ணீர் தேவைக்காக அந்த குழியை இவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். அப்போது அந்த குழியில் புதையல் இருந்ததாக கூறப்படுகிறது. குழியை ஆழமாக தோண்டியதில் ஒரு பழைய பானையில் புதையல் இருந்தது என்று கூறுகிறார்கள். இதை அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி உடனே மாவட்டம் முழுக்க பரவியது.

தகவல் தெரிவிக்கப்பட்டது
இதை அடுத்து அந்த குழியை அக்கம்பக்கத்து ஊர் மக்கள் எல்லோரும் வந்து பார்த்தனர். அங்கே புதையல் இருப்பதாக வெளியான செய்தியை கேட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் அங்கே வர தொடங்கினார்கள். இந்த தகவல் உடனடியாக அந்த பகுதியின் வட்டாச்சியர் ஜானகிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் போலீசார்மற்றும் கிராம பணியாளர்கள் உடன் அங்கே வந்து சோதனை செய்தார்.

இல்லை
அந்த குழி தோண்டப்பட்ட இடத்தில் சோதனைகளை மேற்கொண்டார். அதோடு அந்த விவசாயி குடும்பத்திடமும் போலீசார் சோதனைகளையே மேற்கொண்டனர்.இந்த சோதனையில் , எங்கள் வீட்டு பின்புறத்தில் அப்படி எந்த விதமான புதையலும் கண்டுபிடிக்கப்படவில்லை. தவறான செய்தியை சிலர் பரப்புகிறார்கள். இதை நீங்கள் நம்ப வேண்டாம்.

தொடர் விசாரணை
எங்களுக்கு புதையல் கிடைத்து இருந்தால் அதை உங்களுக்கு கொடுத்து இருப்போம். யாரோ சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள், என்று அந்த குடும்பம் கூறியுள்ளது. ஆனால் அந்த ஊர் மக்கள் சிலர் அங்கே புதையல் இருந்தது உண்மை என்று கூறியுள்ளனர். இதில் எது உண்மை என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications