கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. செல்போன் கோபுரத்தில் ஏறி கணவன் தற்கொலை மிரட்டல்
சேலம்: சேலம் அருகே கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை மீட்டுத்தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சேலம் கருப்பூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். டிரைவரான இவருக்கு சந்தியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சந்தியா வேறு ஒரு நபருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார் நேற்று இரவு 7 மணி அளவில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினார்.
பின்னர் அவர் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை மீட்டுத்தரக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு ஏராளமான பொதுமக்களும் குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், கருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி செல்போன் கோபுரத்தில் இருந்து அவரை கீழே இறக்கி கருப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆலோசனை, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications