கிஃப்ட்டை பிரித்து பார்த்ததும் நெகிழ்ந்துபோன எடப்பாடி..! மேடையிலேயே கண் கலங்கிட்டாரே! ஆஹா!
சேலம் : சேலத்தில் இன்று நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேடைக்கு வந்த அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு பரிசைக் கொடுத்து, அதனை இப்போதே பிரித்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, அதனைப் பிரித்துப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, நெகிழ்ந்துபோய் கண் கலங்கியுள்ளார். இது அங்கிருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டிக்குப் போட்டி
அதிமுகவில் தொடர்ந்து வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், 2024 தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி பேச்சுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கு அடுத்தகட்டமாக வரும் ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நாளை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், வரும் 27ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடிக்கு பரிசு
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, இன்று சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் சிலர் இணைந்து ஸ்பெஷல் பரிசு ஒன்றை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கினர். வழக்கமாக பரிசுப் பொருட்களை வாங்கி தனது உதவியாளரிடம் கொடுத்து விடுவார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்த முறை நிர்வாகிகள் அப்படி விடவில்லை. அங்கேயே பிரித்து பார்க்குமாறு எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொண்டனர்.

நெகிழ்ந்து போன ஈபிஎஸ்
இதையடுத்து, நிர்வாகிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி, அந்தப் பரிசைப் பிரித்து பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிசு, போட்டோ பிரேம் போல இருந்ததால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் தனது படம் இடம்பெற்றிருக்கும் என நினைத்தார் ஈபிஎஸ். ஆனால், கிஃப்ட் கவரை பிரித்து, அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார்.

தன்னை அறியாமல்
காரணம், அதிமுக நிர்வாகிகள் அளித்த அந்த போட்டோ ஃப்ரேமில் இருந்தது எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாளின் புகைப்படம். அதிமுக நிர்வாகிகள் அளித்த புகைப்பட பரிசில் தனது தாயாரின் புகைப்படத்தைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தார் எடப்பாடி பழனிசாமி. உடனே, தன்னை அறியாமல் கண்களில் ஆனந்தக் கண்ணீரும் பெருக்கெடுத்தது.

தொண்டர்கள் முழக்கம்
இதனால், மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகளும் நெகிழ்ந்து போனார்கள். இந்த நிகழ்வு அங்கு ஒருவித நெகிழ்ச்சி அலையை ஏற்படுத்திய நிலையில், தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். "தவசாயி அம்மாள் பெற்றெடுத்த தங்கமகன் எடப்பாடியார்", "சேலம் மன்னின் மைந்தர் எடப்பாடியார்" என்றும் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், எடப்பாடி பழனிசாமி நெகிழ்ந்து போயிருக்கிறார்.

தவசாயி அம்மாள்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காலமானார். அப்போது அவருக்கு 93 வயது. அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யச் சென்றிருந்தார். அங்கு இருந்தபோது தனது தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு உடனே காரில் கிளம்பி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!











Click it and Unblock the Notifications