இங்க வந்துட்டு எடப்பாடியை பத்தி பேசலனா எப்படி? ரவுண்டு கட்டிய உதயநிதி ஸ்டாலின்! ஆஹா.. மாநாடு மாதிரி!
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டி விளாசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சேலம் : எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தன்னை அரசியலில் ஆளாக்கிய ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்குமே எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை. கட்சித் தொண்டர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் உண்மையாக இல்லை. அவர் உண்மையாக இருப்பது மோடி, அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோருக்கு மட்டும்தான்." என விளாசினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள குறும்பபட்டியில் திமுக சார்பில் 1000 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார்.
எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் பெரிய மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சேலத்திற்கு எப்போது வந்தாலும்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சேலத்திற்கு எப்போது வந்தாலும் வரவேற்பு பெரிதாக உற்சாகமாகவும் எழுச்சியாகவும் இருக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். மீண்டும் அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கொடுக்கும் வரவேற்பும் எழுச்சியும் நம்பிக்கை அளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சேலத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்டத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்டுவார் என்று நம்புகிறேன்.

கோட்டையாக மாற்றுவோம்
திமுகவினர் கட்சிப் பணியில் ஈடுபட்டு, சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும். இதுவரை 20 மாவட்டங்களில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்தி முடித்துவிட்டோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்திக் காட்டுவோம்." என உறுதிபடக் கூறினார்.

எடப்பாடிக்கு வந்துட்டு அவரை பத்தி பேசாம
அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டி விளாசத் தொடங்கினார் உதயநிதி. அவர் பேசுகையில், "எடப்பாடிக்கு வந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி பற்றி பேசாமல் போய்விட்டால் அவர் கோபித்துக் கொள்வார். தன்னை அரசியலில் ஆளாக்கிய ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்குமே அவர் உண்மையாக இல்லை. கட்சித் தொண்டர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் உண்மையாக இல்லை. எடப்பாடி பழனிசாமி உண்மையாக இருப்பது மோடி, அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோருக்கு மட்டும்தான்.

பயந்துட்டாங்க
தமிழ்நாடு ஆளுநர் அவருக்கு பிடித்த வார்த்தைகளை வைத்துவிட்டு, மற்ற வார்த்தைகளை விட்டுவிட்டார். இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில், ஆளுநர் இருக்கும்போதே அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநருக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறிவிட்டனர். ஆளுநரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்று அதிமுகவினர் பயந்துவிட்டார்கள்." எனப் பேசினார்.

உங்கள் முகத்தில்
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தேடி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தந்தை பெரியார், அண்ணா இவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது. மூத்த முன்னோடிகள் அவருடன் பயணித்து இருப்பார்கள். உங்கள் முகத்தில் அவர்களைப் பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற இந்தக் கூட்டம் பெரும் மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தது திமுகவினருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications