ஏற்காட்டில் வடமாநில தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம்.. சிக்கிய 3 பேர் பகீர் காரணம்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் வடமாநில தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை பிடித்து விசாரித்ததில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் பணியாற்றி வந்த ஜார்கண்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (41), மற்றும் அவரது மனைவி சுதிகேன்ஸ் (36) ஆகியோர் கடந்த இரண்டு நாள் முன்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இது குறித்த விசாரணையில் அதே எஸ்டேட்டில் பணியாற்றும் முச்ரே 25, சுக்ராம் 22, ராம்சநாத் 35 ஆகிய மூவருக்கும் கொலையில் பங்குஇருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து ஏற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் முச்ரேவின் அண்ணன், புத்ராமினண மனைவி கங்கி கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட சுதிர்கேன்ஸ் நாட்டு மருந்து கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து கங்கிங்கு நாகலூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் பிரசவம் நடைப்பெற்று ஆண் குழந்தை பிறந்து, இறந்துள்ளது. பின்னர் கங்கியம் உடல்நிலை மோசமாகி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் அங்கு இறந்து விட்டார்.
கங்கி மற்றும் அவர் குழந்தை இறந்ததற்கு சுதிகேன்ஸ் நாட்டு மருந்து கொடுத்ததே காரணம் என புத்ராம் எண்ணியுள்ளார்.
இதற்காக பழிவாங்குவதற்காகவே இந்த இரு கொலைகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள புத்ராம் மற்றும் ஹைரா புத்ரே ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications