அனுமதியின்றி போராட்டம்.. கொரோனா பரவ காரணம் உட்பட 3 பிரிவுகளில் ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு
சேலம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், கொரோனா விதிகளை மீறுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்,
திமுக தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்திய நீட் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி அதிமுக சார்பில் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், முறையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையைப் பின்பற்றி போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பும், அரசு அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்தினர்.
தேனியில் இந்தப் போராட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார், அதேபோல சேலத்தில் இந்தப் போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அவருடன் ஏராளமான நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உட்பட 90 அதிமுக நிர்வாகிகள் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பேரிடர் காலத்தில் ஒன்று கூடுதல், கொரோனா பரவ காரணமாக இருத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக மொத்தம் 2000க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications